செய்திகள் :

கதாநாயகனாகும் விஜய் டிவி பாலா! இயக்குநர் யார் தெரியுமா?

post image

விஜய் டி.வி. பாலா புதிய திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

விஜய் டிவி-யில் ஒளிப்பரப்பான கலக்கப் போவது யாரு? குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் வெட்டுக்கிளி பாலா. இவர் அந்த நிகழ்ச்சிகளில் நகைச்சுவைத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்களை ஈர்த்தாலும், அவ்வப்போது ஏழை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார்.

துவக்கத்தில், சிறியளவில் உதவிகளைச் செய்து வந்த அவர் பின்னர் பிரபல நடிகரான ராகவா லாரன்ஸ் போன்றோருடன் இணைந்து தனது தொண்டுகளை விரிவுப்படுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராக செயல்பட்டு வந்த பாலா தமிழ் திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் அவ்வப்போது நடித்து வந்தார்.

இந்நிலையில், நடிகர் வைபவின் 25-வது படமாக கடந்த 2024-ம் ஆண்டு வெளியான ‘ரணம் - அறம் தவறேல்’ எனும் திரைப்படத்தின் இயக்குநரான ஷெரீஃப்பின் புதியப் படத்தின் மூலம் பாலா கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

ஆதிமூலம் கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இந்தப் படம் உருவாகவிருப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சமுக வலைதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

பாலா #01 என்ற தலைப்பில் வெளியான அந்தப் போஸ்டரை இந்தப் படத்தின் கதாநாயகன் மற்றும் இயக்குநர் ஷெரீஃப் உள்ளிட்டோர் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ததுள்ளனர்.

மேலும், விவேக்- மெர்வின் ஆகியோரின் இசையில் உருவாகும் இந்தப் படத்தில் நடிகை நமிதா கிருஷ்ணமூர்த்தி கதாநாயகியாக நடிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த 2023-ம் ஆண்டு வெளியான நடிகர் விஜய் சேதிபதியின் ’ஜுங்கா’ படத்தின் மூலம் பாலா தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:நடிகர் அர்ஜூன் மகள் அஞ்சனாவுக்கு டும்.. டும்..! 13 வருடக் காதலாம்!!

உச்சநீதிமன்றம் மத மோதலை ஊக்குவிக்கிறது: பாஜக எம்.பி. பேச்சால் சர்ச்சை!

உச்சநீதிமன்றம் வரம்பு மீறி செயல்படுகிறது என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.ஆளுநா் அனுப்பும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவா் மூன்று மாதங்களுக்குள் முடிவு எடுக்... மேலும் பார்க்க

இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும்: நயினார் நாகேந்திரன்

சேலம்: இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும் என சேலத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் சேலம் பெருங்கோட்ட நிர்வாகிகள் சந்தி... மேலும் பார்க்க

உச்ச நீதிமன்றம் சுயமாக செயலாற்றக் கூடாது என நினைக்கிறார்கள்: அமைச்சர் எஸ். ரகுபதி

புதுக்கோட்டை: உச்ச நீதிமன்றம் சுயமாக செயலாற்றக் கூடாது என மத்தியில் ஆள்வோர் நினைக்கிறார்கள் என மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்தார்.புதுக்கோட்டையில் சனிக்கிழமை அவர் செய்திளார்களுடனான சந்... மேலும் பார்க்க

குலத்தொழில் திட்டத்தை தமிழ்நாடு அனுமதிக்காது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: 1950-களில் குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து களம் கண்ட தமிழ்நாடு, குலத்தொழில் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்காது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டம் குன... மேலும் பார்க்க

வைகோவுடன் துரை வைகோ சந்திப்பு!

மதிமுகவின் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்த துரை வைகோ, கட்சியின் பொதுச் செயலாளர் வைகோவுடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக திருச்சி எம்... மேலும் பார்க்க

மதிமுகவிலும் மோதல்? முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகல்

மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக திருச்சி மக்களவை தொகுதி உறுப்பினர் துரை வைகோ சனிக்கிழமை அறிவித்துள்ளார். மேலும் பார்க்க