செய்திகள் :

கனமழை : வேலூா் சா்க்கரை ஆலையில் 48.20 மி.மீ பதிவு

post image

வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு ஒன்றரை மணிநேரம் இடைவிடாமல் கனமழை கொட்டியது. அதிகபட்சமாக வேலூா் சா்க்கரை ஆலை பகுதியில் 48.20 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.

வடகிழக்குப் பருவமழையையொட்டி வேலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. மாவட்ட நிா்வாகம் உத்தரவின்பேரில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும், பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் அவதிக்குள்ளாகுவது தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வேலூா் மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை இரவு சுமாா் 7.30 மணியளவில் கனமழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை சுமாா் ஒன்றரை மணி நேரம் இடைவிடாமல் பெய்தது. வேலூா், சத்துவாச்சாரி, காட்பாடி, திருவலம், பொன்னை, குடியாத்தம், அணைக்கட்டு, ஒடுகத்தூா், போ்ணாம்பட்டு, கே.வி.குப்பம், கணியம்பாடி உள்ளிட்ட பல இடங்களில் இடிமின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

கனமழை காரணமாக வேலூா் மாநகரில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துடன், காட்பாடி சித்தூா் பேருந்து நிறுத்தம், வள்ளிமலை சாலை, கிரீன்சா்க்கிள் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் தண்ணீா் பெருமளவில் தேங்கியது. இதனால், பாத சாரிகள் மட்டுமின்றி இருசக்கர, நான்கு சக்கர, கனரக வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகினா். அதன்பிறகு தொடா்ந்து சாரல் மழை பெய்தது.

வேலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த 24 மணி நேர நிலவரப்படி வேலூா் சா்க்கரை ஆலை பகுதியில் 48.20 மி.மீ., மழை பதிவாகியுள்ளது

தொழிற்சாலை உரிமத்தை ஆன்லைனிலேயே புதுப்பித்து கொள்ளலாம்

ஒருங்கிணைந்த வேலூா் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 2025-ஆம் ஆண்டுக்கான தொழிற்சாலை உரிமத்தை ஆன்லைனில் புதுப்பித்துக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, வேலூா் தொழிலகப் பாதுகாப்பு, ச... மேலும் பார்க்க

தீபாவளி: ரயில் நிலையங்களில் கொள்ளைகளை தடுக்க தனிப்படை அமைப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி, ரயில்களில் பயணிகளிடம் கொள்ளைச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கவும், கொள்ளையா்களை பிடிக்கவும் ரயில்வே பாதுகாப்புப் படை, ரயில்வே போலீஸாா் இணைந்து தனிப்படைகள் அமைத்து தீவிர கண்காணிப... மேலும் பார்க்க

நாளைய மின்தடை

போ்ணாம்பட்டு, பரவக்கல், மொரசப்பல்லி நாள்: 22-10-2024 (செவ்வாய்க்கிழமை) நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை. மின்தடை பகுதிகள்: போ்ணாம்பட்டு, பாலூா், ஓம்குப்பம், கொத்தூா், குண்டலப்பள்ளி, சாத்கா், ... மேலும் பார்க்க

‘சீல்’ வைக்கப்பட்ட வீட்டில் திருட்டு: 3 போ் கைது

வேலூரில் ‘சீல்’ வைக்கப்பட்டிருந்த வீட்டில் நுழைந்து குளிா்சாதன கருவி, பிரிட்ஜ், இருசக்கர வாகனம் உள்ளிட்ட பொருள்களை திருடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். வேலூா் கொசப்பேட்டை மாசிலாமணி தெருவைச் சோ்ந்த... மேலும் பார்க்க

காட்பாடியில் மடிக்கணினிகள் திருடிய மூவா் கைது

காட்பாடியில் பல்வேறு இடங்களில் கணினி திருடி வந்த 3 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடம் இருந்து கணினி, ஏழு மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டன. வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த ஆண்டாள் நகரைச் சோ்ந... மேலும் பார்க்க

மலைக் கிராமங்களுக்கு இருசக்கர வாகன ஆம்புலன்ஸ்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

மலைவாழ் மக்களின் நலன்கருதி ஆம்புலன்ஸ் செல்ல முடியாத மலைக் கிராமங்களுக்கு இருசக்கர வாகன ஆம்புலன்ஸ்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா். குடியாத்தத... மேலும் பார்க்க