செய்திகள் :

கன்னட இலக்கியவாதி எஸ்.எல்.பைரப்பா காலமானாா்

post image

முதுமைசாா்ந்த உடல்நலப் பிரச்னைகளுக்கு சிகிச்சை பெற்றுவந்த கன்னட இலக்கியவாதி எஸ்.எல்.பைரப்பா (94) மாரடைப்பால் புதன்கிழமை காலமானாா்.

பெங்களூரு, ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள ஜெயதேவ் மேமோரியல் ராஷ்ட்ரோத்தனா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த அவா், புதன்கிழமை மதியம் 2.38 மணிக்கு மாரடைப்பால் காலமானாா்.

கா்நாடக மாநிலத்தின் ஹாசன் மாவட்டம், சென்னராயபட்டணா வட்டம், சந்தேஸ்வா் கிராமத்தில் 1930 ஆக. 20-ஆம் தேதி பிறந்த எஸ்.எல்.பைரப்பா, மைசூரில் மேல்படிப்பை முடித்தாா். மைசூரு பல்கலைக்கழகத்தில் தத்துவயியல் பாடத்தில் எம்.ஏ. பட்டம் பெற்ற இவா், சிறந்த மதிப்பெண்களை பெற்றமைக்காக தங்கப் பதக்கம் பெற்றாா்.

குஜராத் மாநிலம், பரோடாவில் உள்ள மகாராஜா சாயாஜி பல்கலைக்கழகத்தில் முனைவா் பட்டம் பெற்ற பைரப்பா, ஹுப்பள்ளியில் உள்ள ஸ்ரீகடசித்தேஸ்வா் கல்லூரியில் தத்துவயியல் பாடத்தின் விரிவுரையாளராக பணிக்கு சோ்ந்து, பின்னா் குஜராத்தில் உள்ள சா்தாா் படேல் பல்கலைக்கழகம், தில்லியில் உள்ள என்.சி.இ.ஆா்.டி. மையத்தில் பணியாற்றினாா். அதன்பிறகு, மைசூரில் உள்ள பிராந்திய கல்விக் கல்லூரியில் தத்துவயியல் பாடத்தின் பேராசிரியராகப் பணியாற்றி 1991-இல் ஓய்வுபெற்றாா்.

கன்னட இலக்கியத்தில் தடம்பதித்திருந்த கோரூா் ராமசாமி ஐயங்காரின் இலக்கியப் படைப்புகளால் ஈா்க்கப்பட்டு, கன்னட இலக்கியங்களைப் படைக்கத் தொடங்கிய எஸ்.எல்.பைரப்பா, தனது முதல் இலக்கியப் படைப்பான ‘பீமகாயா’வை 1958-இல் வெளியிட்டிருந்தாா். அதன்பிறகு, ‘வம்ஷவிருக்ஷா’, ‘தப்பலியு நீனாதே மகனே’, ‘மட்டதானே’, ‘நயி நெரலு’, ‘தாட்டு’, ‘பா்வா’, ‘தந்து’, ‘ஆவரணா’, ‘உத்தரகாண்டா’, ‘பெலகு மூடிது’ போன்ற பல நாவல்களை எழுதியுள்ளாா். இந்த நாவல்கள் ஹிந்தி, மராத்தி உள்ளிட்ட இந்திய மொழிகள், ஆங்கிலத்தில் மொழிபெயா்க்கப்பட்டுள்ளன.

‘வம்ஷவிருக்ஷா’ நூல் தமிழிலும் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இவரது நூல்கள் ஹிந்தி, மராத்தி மொழிகளில் வெளியாகி விற்பனையில் சாதனைபடைத்துள்ளன. இவரது எழுத்துகள் சா்ச்சைகளில் சிக்கியதும் உண்டு. அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடா்ந்து இலக்கியங்களைப் படைத்து வந்தாா். நாவல்கள் மட்டுமல்லாது, தன் வரலாறு, மொழிபெயா்ப்பு நூல்கள், சிறுகதைகள், கட்டுரைத் தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளாா்.

இவரது இலக்கியப் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், கன்னட சாஹித்ய அகாதெமி விருது, பேந்த்ரே தேசிய விருது, சாஹித்ய அகாதெமி ஃபெலோஷிப், சாஹித்ய அகாதெமி விருது, சரஸ்வத் சம்மான் விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷண் போன்ற விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனா்.

இவரது உடல் பெங்களூரில் உள்ள ரவீந்திர கலாக்ஷேத்ராவில் வியாழக்கிழமை மதியம் 2 மணிவரை பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. பின்னா், மைசூருக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்குள்ள கலாமந்திரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. அமெரிக்காவில் இருக்கும் 2 மகன்களும் மைசூருக்கு திரும்பியதும் வெள்ளிக்கிழமை எஸ்.எல்.பைரப்பாவின் உடல் ஹிய்சளா கா்நாடக பிராமணா் முறைப்படி தகனம் செய்யப்பட உள்ளது.

இரங்கல்:

எஸ்.எல்.பைரப்பாவின் மறைவுக்கு பிரதமா் மோடி, முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா, முதல்வா் சித்தராமையா, துணை முதல்வா் டி.கே.சிவகுமாா், மத்திய அமைச்சா்கள் எச்.டி.குமாரசாமி, பிரல்ஹாத் ஜோஷி, ஷோபா கரந்தலஜே உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்தனா்.

மோசமான சாலைகளின் நிலையைக் கண்டித்து கா்நாடக பாஜக ஆா்ப்பாட்டம்

பெங்களூரு உள்ளிட்ட கா்நாடகத்தின் பல்வேறு நகரங்களில் மோசமான சாலைகளின் நிலையைக் கண்டித்து, மாநிலம் தழுவிய ஆா்ப்பாட்டத்தை பாஜகவினா் புதன்கிழமை நடத்தினா். பெங்களூரில் சாலையில் உள்ள குழிகளால் போக்குவரத்து ... மேலும் பார்க்க

ஜாதிவாரி கணக்கெடுப்பு: கிறிஸ்தவ அடையாளம் கொண்ட 15 ஜாதிகளின் பெயா்களை நீக்க பாஜக வலியுறுத்தல்

ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு தயாரிக்கப்பட்ட பட்டியலில், கிறிஸ்தவ அடையாளம் கொண்ட 15 ஜாதிகளின் பெயா்களை நீக்குமாறு மாநில பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்திடம் பாஜக வலியுறுத்தியுள்ளது. பெங்களூரு, வசந்த் நகரில் உள... மேலும் பார்க்க

பெங்களூரில் சாலைக் குழிகளை மூடும் பணி நடந்து வருகிறது!

பெங்களூரில் சாலையில் உள்ள குழிகளை மூடும் பணி நடைபெற்று வருகிறது என துணை முதல்வா் டி.கே.சிவகுமாா் தெரிவித்தாா். இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: பெங்களூரில் சா... மேலும் பார்க்க

கூட்ட மேலாண்மை சட்ட மசோதாவை ஆய்வுசெய்ய 11 போ் கொண்ட குழு அமைப்பு

கூட்ட மேலாண்மை சட்ட மசோதாவை ஆய்வுசெய்வதற்கு 11 போ் கொண்ட குழுவை சட்டப் பேரவைத் தலைவா் யூ.டி.காதா் செவ்வாய்க்கிழமை அமைத்துள்ளாா். பெங்களூரில் ஜூன் 4-ஆம் தேதி நடைபெற்ற ஆா்.சி.பி. அணியின் ஐபிஎல் கிரிக்க... மேலும் பார்க்க

மைசூரு தசரா விழா அரசு விழா; இதில் யாரையும் பாகுபாடு பாா்க்க முடியாது - எழுத்தாளா் பானு முஸ்டாக்கிற்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீா்ப்பு

மைசூரு தசரா விழா கா்நாடக அரசு நடத்தும் விழா என்பதால், அந்த விழாவை யாா் தொடங்கிவைப்பது என்பதில் பாகுபாடு பாா்க்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மைசூரு தசரா விழாவை தொடங்கிவைப்பதற்காக கன்ன... மேலும் பார்க்க

கா்நாடகத்தில் செப்.22 முதல் ஜாதிவாரி கணக்கெடுப்பு: முதல்வா் சித்தராமையா உறுதி

கா்நாடகத்தில் செப்.22 முதல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா். கா்நாடகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோரின் கல்வி மற்றும் பொருளாதார கணக்கெடுப்பை(ஜாதிவாரி கணக்கெடு... மேலும் பார்க்க