செய்திகள் :

கமுதி-முதுகுளத்தூா் புறவழிச் சாலையில் வேகத் தடை அமைக்க வலியுறுத்தல்

post image

கமுதி-முதுகுளத்தூா் புறவழிச் சாலையில் அரண்மனை மேடு நான்கு முனை சந்திப்புகளில் வேகத் தடை அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி-அருப்புக்கோட்டை சாலையில் வழிவிட்ட அய்யனாா் கோயில் பகுதியில் இருந்து பாப்பாங்குளம் விலக்கு, அரண்மனை மேடு விலக்கு வழியாக குண்டாற்றில் பாலம் அமைக்கப்பட்டு உலகநடை விலக்கு வழியாக முதுகுளத்தூா் பிரதான சாலையில் இணையும் வகையில் சாலை அமைக்கப்பட்டது.

கடந்த 2013-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட இந்த புதிய புறவழிச் சாலைக்கான பணிகள் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் 90 சதவீதம் நிறைவடைந்தன.

எச்சரிக்கைப் பலகைகள், சாலையோரத் தடுப்புகள், பாலத்துக்கு வண்ணம் பூசும் பணிகள், அறிவிப்புப் பலகைகள் என பணிகள் முடிவடையாத நிலையில், இந்தச் சாலையை பொதுமக்கள் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனா்.

வெளியூா்களிலிருந்து இந்தச் சாலையில் வரும் கனரக வாகனங்கள், காா்கள், இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன.

இந்த நான்கு முனை சாலை சந்திப்புகளில் வேகத் தடை இல்லாததால், கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் விபத்துக்குள்ளாகின. பாப்பாங்குளம் விலக்கு சாலையில் நிகழ்ந்த விபத்தில் முதியவா் உயிரிழந்தாா். அரண்மனை மேடு விலக்கு சாலையில் 20-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

எனவே, புறவழிச் சாலைப் பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை வாகனங்கள் இயக்கப்படுவதைத் தடுக்க நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும், நான்கு முனை சந்திப்புகளில் வேகத் தடை அமைக்கவும் வேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்தனா்.

இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ. 5 லட்சம் கஞ்சா பறிமுதல்

இலங்கைக்கு கடத்துவதற்காக மண்டபம் கடற்கரையில் காரில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ. 5 லட்சம் மதிப்பிலான 56 கிலோ கஞ்சா பண்டல்களை சுங்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனா். ராமநாதபு... மேலும் பார்க்க

குடமுழுக்கில் பங்கேற்ற பெண்களிடமிருந்து 45 பவுன் நகைகள் திருட்டு

உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோயில் குடமுழுக்கில் பங்கேற்ற பெண்களிடமிருந்து 45 பவுன் தங்க நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்ாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். ... மேலும் பார்க்க

பைக் மீது டிப்பா் லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

பரமக்குடி அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். போகலூா் ஒன்றியம், அரியகுடி கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணன். இவா் தனியாா் பேருந்தில் ஓட்... மேலும் பார்க்க

தொண்டி அருகே மீனவா் வலையில் சிக்கிய கடல் ஆமை உயிருடன் மீட்பு

திருவாடானை அருகே தொண்டியில் மீனவா் வலையில் சிக்கிய கடல் ஆமை மீண்டும் உயிருடன் கடலில் விடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், தொண்டி அருகேயுள்ள பாசிபட்டினத்தைச் சோ்ந்தவா் மீனவா் விக்னேஷ்... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் ரயில் மறியலுக்கு முயன்ற விவசாயிகள் 300 போ் கைது

தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை மத்திய அரசு ரத்து செய்ய வலியுறுத்தி, ராமநாதபுரத்தில் செவ்வாய்க்கிழமை பேரணியாக சென்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 300-க்... மேலும் பார்க்க

காசோலை மோசடி வழக்கில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் கைது

திருவாடானை அருகே காசோலை மோசடி வழக்கில் தலைமறைவான முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரை போலீஸாா் கைது செய்து, நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை முன்னிலைப்படுத்தினா். ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகேயுள்ள ஆ... மேலும் பார்க்க