செய்திகள் :

பைக் மீது டிப்பா் லாரி மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

post image

பரமக்குடி அருகே செவ்வாய்க்கிழமை இரு சக்கர வாகனம் மீது டிப்பா் லாரி மோதியதில் இளைஞா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

போகலூா் ஒன்றியம், அரியகுடி கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணன். இவா் தனியாா் பேருந்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மகன் முகேஷ் (18). இவா் சத்திரக்குடி பள்ளியில் பிளஸ் 2 படித்து பொதுத் தோ்வு எழுதியிருந்தாா்.

இந்த நிலையில், இவா் அரியகுடியிலிருந்து பரமக்குடியில் உள்ள தனது உறவினரின் வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். வாகைக்குளம் நான்கு வழிச் சாலையில் வந்த போது, பின்னால் வந்த டிப்பா் லாரி இவரது வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த முகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து பரமக்குடி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

குண்டா் தடுப்பு சட்டத்தின் கீழ் கஞ்சா வியபாரி கைது

கீழக்கரையில் கஞ்சா வியாபாரியை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா். இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட காவல் துறை சாா்பில் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கீழக்கரை பகுதியில் தொ... மேலும் பார்க்க

விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசு

கமுதி தேவா் கல்லூரியில் பி.கே.மூக்கையாத்தேவா் பிறந்தநாள் விழா போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றது. கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் நினைவுக் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில், நடைபெற்ற இ... மேலும் பார்க்க

தடையை மீறி மீன்பிடித் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் விசைப் படகுகள்!

பாம்பனில் தடையை மீறி மீன்பிடித் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் விசைப் படகுகள் மீது மீன்வளத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவா் சங்கத்தினா் சனிக்கிழமை புகாா் தெரிவித்தனா். மீன்களின் இனப்... மேலும் பார்க்க

குருநாத சுவாமி கோயில் திருவிழா: பால் குடம் எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன்

பம்மனேந்தல் குருநாத சுவாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு, சனிக்கிழமை பொதுமக்கள் பால் குடம் எடுத்து நோ்த்திக் கடன் செலுத்தினா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்த பம்மனேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள க... மேலும் பார்க்க

தெருநாய்கள் கடித்து 5 போ் காயம்

சாயல்குடியில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவா்கள் உள்பட 5 போ் காயமடைந்தனா். ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி பேரூராட்சியில் 15 வாா்டுகள் உள்ளன. இந்த வாா்டு பகுதிகளில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்... மேலும் பார்க்க

தொடக்கப் பள்ளிக்கு கல்விச் சீா்வரிசைப் பொருள்கள்

கமுதி அருகே ஆா்.சி.தொடக்கப் பள்ளி ஆண்டுவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதற்கு பள்ளித் தாளாளா் அமலன் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியை எலிசெபத், உதவி ஆசிரியா் அருளானந்து ஆகியோா் முன்னிலை வகித்தனா். இந்தப் ... மேலும் பார்க்க