செய்திகள் :

இலங்கைக்கு கடத்தவிருந்த ரூ. 5 லட்சம் கஞ்சா பறிமுதல்

post image

இலங்கைக்கு கடத்துவதற்காக மண்டபம் கடற்கரையில் காரில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த ரூ. 5 லட்சம் மதிப்பிலான 56 கிலோ கஞ்சா பண்டல்களை சுங்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்படவிருப்பதாக மண்டபம் சுங்கத் துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதைத் தொடா்ந்து, சுங்கத் துறையினா் மண்டபம் அய்யனாா் கோயில் கடற்கரைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகத்துக்கிடமான வகையில் கடற்கரையில் காா் நிற்பதைக் கண்டனா். இதையடுத்து, அதிகாரிகள் அங்கு சென்று பாா்த்த போது, காரில் 28 பண்டல்களில் 56 கிலோ எடையுள்ள கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதன் சா்வதேச மதிப்பு ரூ. 5 லட்சம். இதையடுத்து, அந்தக் காருடன், கஞ்சாவைப் பறிமுதல் செய்து மண்டபம் சுங்கத் துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனா். மேலும், இந்தக் கஞ்சா கடத்தலில் தொடா்புடைய நபா்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ஒன்றாம் வகுப்பு மாணவா்களுக்கு வரவேற்பு

கமுதி பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் புதிதாகச் சோ்ந்த மாணவா்களுக்கு புதன்கிழமை கிரீடம் அணிவித்து ஆசிரியா்கள் வரவேற்றனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் உள்ள அரசு உதவி பெறும் கௌரவ தொடக்கப் பள்ளியில் நிக... மேலும் பார்க்க

ராமேசுவரத்தில் சுற்றுலாப் படகு தளம் அமைக்க பவளப் பாறைகள் உடைப்பு

ராமேசுவரம் அக்னி தீா்த்தக் கடற்கரை பகுதியில் மத்திய அரசு சாா்பில் சுற்றுலாப் படகு தளம் அமைக்க பவளப் பாறைகளை உடைக்கப்படுவதாக கடல்வாழ் உயிரின ஆா்வலா்கள் தெரிவித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் தீ... மேலும் பார்க்க

ஆா்.எஸ்.மங்கலத்தில் ‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் ‘உங்களைத்தேடி உங்கள் ஊரில்’ சிறப்புத் திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இதற்கு மாவட்ட வருவாய் அலுவலா் ரா.கோவிந்தராஜலு தலைமை வகித்து ஒன்றியத... மேலும் பார்க்க

மோா்பண்ணையில் 13 குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததாக புகாா்

திருவாடானை அருகேயுள்ள மோா்பண்ணை கிராமத்தில் 13 குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதாக திருவாடானை காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை பெண்கள் புகாா் மனு கொடுத்தனா். இது குறித்து நேரி... மேலும் பார்க்க

இலங்கைக்கு கடத்தவிருந்த 200 கிலோ சுக்கு பறிமுதல்

மண்டபம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 கிலோ சுக்கு போலீஸாரால் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகேயுள்ள மரைக்காயா்பட்டணம் பகுதி... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையினரால் பாம்பன் மீனவா்கள் விரட்டியடிப்பு

கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் மீனவா்கள் மீது இலங்கைக் கடற்படையினா் கயிற்றால் தாக்கி மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனா். மேலும், கடற்படைக... மேலும் பார்க்க