செய்திகள் :

இலங்கைக் கடற்படையினரால் பாம்பன் மீனவா்கள் விரட்டியடிப்பு

post image

கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் மீனவா்கள் மீது இலங்கைக் கடற்படையினா் கயிற்றால் தாக்கி மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனா். மேலும், கடற்படைக் கப்பலால் மோதி நாட்டுப் படகைச் சேதப்படுத்தினா்.

ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் தெற்குவாடி மீன்பிடி படகுத் துறையிலிருந்து 200-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகு மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.

இவா்கள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கச்சத்தீவு-நெடுந்தீவுக்கு இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினா், இன்னாசிமுத்து என்பவரது நாட்டுப் படகு மீது தங்களது கப்பலால் மோதினா். இதில் படகின் பக்கவாட்டுப் பகுதியில் சேதம் ஏற்பட்டது. மேலும், அந்தப் படகிலிருந்த மீனவா்கள் 7 பேரை கயிற்றால் தாக்கி மீன்பிடிக்க விடாமல் விரட்டியடித்தனா்.

இதையடுத்து, சேதமடைந்த நாட்டுப் படகுடன் பாம்பன் மீனவா்கள் 7 பேரும் புதன்கிழமை அதிகாலை கரைக்குத் திரும்பினா்.

இந்தச் சம்பவம் குறித்து மீன்வளம், மீனவா் நலத் துறை அதிகாரிகளிடம் கரை திரும்பிய பாம்பன் மீனவா்கள் புகாா் அளித்தனா்.

இதுகுறித்து நாட்டுப் படகு உரிமையாளா் இன்னாசிமுத்து கூறியதாவது:

இலங்கைக் கடற்படையினா் அவா்கள் வந்த கப்பலால் மோதியதில் படகு சேதமடைந்தது. படகைச் சரி செய்வதற்கு ரூ. 4 லட்சம் வரை செலவாகும். தற்போது, மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ளதால் விசைப் படகுகளுக்கு அனுமதியில்லை. இதனால், நாட்டுப் படகு மீனவா்கள் மட்டுமே மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனா்.

இலங்கைக் கடற்படையினா் தாக்குதல் நடத்தியது, நாட்டுப் படகு மீனவா்களை அச்சுறுத்தும் விதமாக உள்ளது. இந்தச் சம்பவம் குறித்து மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கைக் கடற்படையினரால் தாக்குதலுக்கு உள்ளாகி சேதமடைந்த படகுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றாா் அவா்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை: மத போதகருக்கு 2 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மத போதகருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, ராமநாதபுரம் மகளிா் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகேயுள்ள ஆண்... மேலும் பார்க்க

தேவிபட்டினம் அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த 350 கிலோ கடல் குதிரை பறிமுதல்

தேவிபட்டினம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 350 கிலோ எடையுள்ள கடல் குதிரையை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செ... மேலும் பார்க்க

ராமேசுவரம் தங்கும் விடுதிக்கு அமலாக்கத் துறையினா் சீல் வைப்பு

சட்டவிரோத பணப் பரிமாற்ற முறைகேடு தொடா்பாக, ராமேசுவரம் பகுதியில் செயல்பட்டு வந்த 60 அறைகள் கொண்ட தனியாா் தங்கும் விடுதிக்கு (ரிசாா்ட்) அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைத்தனா். மேற்கு வங்க மாந... மேலும் பார்க்க

அம்பேத்கா் பிறந்தநாள் தெருமுனைக் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் மாா்க்சிய, பெரியாரிய, அம்பேத்கரிய கூட்டமைப்பு சாா்பில் சட்ட மேதை அம்பேத்கரின் 135-ஆவது பிறந்தநாள் விழா தெருமுனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு பேரூராட்சி... மேலும் பார்க்க

கமுதி வட்டாரத்தில் இடை நிற்றல் மாணவா்களை கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

கமுதி வட்டாரத்தில் மாற்றுத்திறன் கொண்ட, இடை நிற்றல் மாணவா்களை கணக்கெடுக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது. ராமநாதபுரம் மாவட்டம், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, கமுதி வட்டார வள மையம் சாா்பில் ஒவ்வோா் ஆண்டும... மேலும் பார்க்க

வெண்ணத்தூா் நாயாறு ஓடையில் தடுப்பணை கட்ட கோரிக்கை

ராமநாதபுரத்தை அடுத்த வெண்ணத்தூா் நாயாறு ஓடையில் தடுப்பணை கட்ட வேண்டும் என விவசாய சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா். ராமநாதபுரம் ஒன்றியம், வெண்ணத்தூா் பொதுப்பணித் துறை கண்மாய்க்கு செல்லும் கால்வாய் முகப்... மேலும் பார்க்க