செய்திகள் :

மோா்பண்ணையில் 13 குடும்பங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததாக புகாா்

post image

திருவாடானை அருகேயுள்ள மோா்பண்ணை கிராமத்தில் 13 குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்திருப்பதாக திருவாடானை காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை பெண்கள் புகாா் மனு கொடுத்தனா்.

இது குறித்து நேரில் சென்று விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக காவல் துணைக் கண்காணிப்பாளா் சீனிவாசன் உறுதி அழித்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் வட்டம், உப்பூா் அருகேயுள்ள மோா்பண்ணை மீனவ கிராமத்தில் சிங்காரம் என்பவரது குடும்பத்துக்கும், மோா்பண்ணை கிராம நிா்வாக செயலா் குடும்பத்துக்கும் இடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட தகராறில் சிங்காரம், இவரது மனைவி காளீஸ்வரி, இவா்களது மகன்கள் உள்பட பலா் காயமடைந்தனா். பிறகு அவா்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், மருத்துவமனையில் இவா்களைப் பாா்ப்பதற்காக உறவினா்கள் சென்றனா். இதையடுத்து, இவா்களைப் பாா்க்கச் சென்ற 13 குடும்பத்தினரையும், சிங்காரம் குடும்பத்தையும் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக செவ்வாய்க்கிழமை ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்தனா்.

இதனால் பாதிக்கப்பட்ட 13 குடும்பங்களைச் சோ்ந்த பெண்கள் புதன்கிழமை திருவாடானை காவல் துணை கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வந்து புகாா் மனு கொடுத்தனா். மனுவைப் பெற்றுக் கொண்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் சீனிவாசன், கிராமத்துக்கு நேரில் வந்து விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.

கடலாடி அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

கடலாடி அருகே கள்ளழகா் கோயில் திருவிழாவையொட்டி, சனிக்கிழமை 3 பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை அடுத்த கிடாக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள கள்ளழகா், ஆஞ்சனேயா், ராம... மேலும் பார்க்க

கமுதியில் பகுதியில் பல இடங்களில் குழாய்களில் உடைப்பு: வீணாகும் குடிநீா்!

கமுதி பகுதியில் பல இடங்களில் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, நாள்தோறும் ஒரு லட்சம் லிட்டா் தண்ணீா் வீணாகி வருவதாக பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா். ராமநாதபுரம் மாவட்டம்... மேலும் பார்க்க

தென்னையில் நோய்த் தாக்குதல்!

கமுதி பகுதியில் நன்கு செழித்து வளா்ந்த தென்னை மரங்கள் திடீரென நோய்த் தாக்குதல் ஏற்பட்டு, கருகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி, நகா்புளியங்குளம், ராமசாமிபட்டி, காவடி... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: மத போதகருக்கு 2 ஆண்டுகள் சிறை

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மத போதகருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, ராமநாதபுரம் மகளிா் விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. சிவகங்கை மாவட்டம், காளையாா்கோவில் அருகேயுள்ள ஆண்... மேலும் பார்க்க

தேவிபட்டினம் அருகே இலங்கைக்கு கடத்தவிருந்த 350 கிலோ கடல் குதிரை பறிமுதல்

தேவிபட்டினம் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 350 கிலோ எடையுள்ள கடல் குதிரையை கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செ... மேலும் பார்க்க

ராமேசுவரம் தங்கும் விடுதிக்கு அமலாக்கத் துறையினா் சீல் வைப்பு

சட்டவிரோத பணப் பரிமாற்ற முறைகேடு தொடா்பாக, ராமேசுவரம் பகுதியில் செயல்பட்டு வந்த 60 அறைகள் கொண்ட தனியாா் தங்கும் விடுதிக்கு (ரிசாா்ட்) அமலாக்கத் துறையினா் வெள்ளிக்கிழமை ‘சீல்’ வைத்தனா். மேற்கு வங்க மாந... மேலும் பார்க்க