செய்திகள் :

கமுதி: வரதட்சணை கேட்டு நெருக்கடி; பாலியல் தொல்லை கொடுத்த மாமனார்; தீயிட்டு உயிரை மாய்த்த மருமகள்

post image

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ளது வீர மாச்சான்பட்டி கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த, கமுதி தெற்கு ஒன்றிய திமுக விவசாய அணி துணை அமைப்பாளர் அண்ணாதுரை. இவரது மகன் முனீஸ்வரன் .

முனீஸ்வரனின் மனைவி ரஞ்சிதா. இவர்களுக்கு 12 வயதில் மகனும் 11 வயதில் மகளும் உள்ளனர். இந்நிலையில் ரஞ்சிதாவிடம் கணவர் முனீஸ்வரன், மாமனார் அண்ணாதுரை மற்றும் மாமியார் சூரம்மாள் ஆகியோர் வரதட்சணையாக பணம் மற்றும் நகைகள் கேட்டுத் துன்புறுத்தி வந்துள்ளனர்.

தற்கொலை செய்துகொண்ட ரஞ்சிதா
தற்கொலை செய்துகொண்ட ரஞ்சிதா

மேலும் ரஞ்சிதாவிடம் மாமனார் அண்ணாதுரை பாலியல் சீண்டலிலும் ஈடுபட்டுள்ளார். இது குறித்து தனது கணவர் முனீஸ்வரனிடம், ரஞ்சிதா கூறியும் அவர் இதனைக் கண்டுகொள்ளவில்லை. இதனால் மன உளைச்சலிலிருந்த ரஞ்சிதா, செவ்வாய்க்கிழமை இரவு திடீரென உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

கணவர் முனீஸ்வரன்
கணவர் முனீஸ்வரன்

இதனால் துடித்துப் போன ரஞ்சிதாவின் அலறலைக் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், ரஞ்சிதாவை மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அதிக அளவு தீக்காயம் ஏற்பட்டிருந்ததால் ரஞ்சிதாவை மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். அங்குச் சிகிச்சை பலனின்றி நேற்று காலை ரஞ்சிதா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து தற்கொலைக்குக் காரணமானவர்களைக் கைது செய்யக் கோரி ரஞ்சிதாவின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைச் சமாதானம் செய்த போலீஸார் ரஞ்சிதாவின் உடலை ஒப்படைத்தனர்.

மாமனார் அண்ணாதுரை
மாமனார் அண்ணாதுரை

ரஞ்சிதா கொடுத்த மரண வாக்குமூலம் மற்றும் ரஞ்சிதாவின் தந்தை பச்சமால் கொடுத்த புகாரின் அடிப்படையில் பெருநாழி காவல் நிலைய போலீஸார், ரஞ்சிதாவின் கணவர் முனீஸ்வரன், மாமனார் அண்ணாதுரை, மாமியார் சூரம்மாள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தலைமறைவான அண்ணாதுரை உள்ளிட்டோரை போலீஸார் தேடி வருகின்றனர். வரதட்சணை மற்றும் மாமனாரின் பாலியல் தொல்லையால் மருமகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

காதலிக்காக மனைவிக்கு விவாகரத்து: சொத்துடன் வராததால் காதலனை கொடூரமாக அடித்து தெருவில் போட்ட காதலி..

மும்பை தாதரில் வசிப்பவர் ரஞ்சித் தேஷ்முக் (48). ரியல் எஸ்டேட் ஏஜெண்டாக வேலை செய்து வருகிறார். அதோடு அரசு நிறுவனம் ஒன்றில் பாய்லர் ஆப்ரேட்டராகவும் இருக்கிறார். இவருக்கு ஷில்பா(51) என்ற பெண்ணுடன் தொடர்ப... மேலும் பார்க்க

3 வயது ஆண் குழந்தை; 12 லட்சத்திற்கு விற்க முயற்சி; 3 பெண்கள் கைது - பின்னணி என்ன?

சென்னையை சேர்ந்த கார்த்திக் என்பவரிடம் பெண் ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு குழந்தை ஒன்று விற்பனைக்கு உள்ளது என்றும், ரூ.12 லட்சம் கொடுத்தால் குழந்தையை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறியிருக்கிறார். இதன... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி: சிறுமி பாலியல் வன்கொடுமை; வடமாநில நபர் கைது - குற்றவாளியை உறுதிபடுத்தியது எப்படி?

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 4-ம் வகுப்பு சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட வழக்கில் சந்தேகப்படும் நபரை நேற்று (ஜூலை 25) கைது செய்துள்ளது காவல்துறை. ஜூலை மாதம் 12-ம் தேதி, பள்ளிக்குச் செ... மேலும் பார்க்க

``பேரல்களை அடுக்கி, சுவர் ஏறி குதித்தேன்" - கண்ணூர் சிறையிலிருந்து தப்பிய கோவிந்தசாமி சொல்வது என்ன?

கேரள மாநிலம், கொச்சியில் இருந்து சொர்ணூர் சென்ற ரயிலில் 2011-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி பயணித்தார் தனியார் நிறுவன ஊழியரான செளமியா(23). அதே ரயிலில் பயணித்த தமிழ்நாட்டின் விருத்தாச்சலத்தைச் சேர்ந்த கோவ... மேலும் பார்க்க

சென்னை: திருமணமான பெண்ணுடன் குடும்பம் நடத்திய வடமாநில இளைஞர் - கொலையில் முடிந்த கூடா நட்பு!

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்தவர் கணேசமூர்த்தி (47). இலரின் மனைவி சரசு (38). இந்தத் தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த மகன் சற்று மூளை வளர்ச்சி குன்றியவர். கணேசமூர... மேலும் பார்க்க

சாத்தான்குளம் லாக்கப் டெத்: அப்ரூவராக மாற விரும்பும் ஸ்ரீதர்; எதிர்க்கும் சிபிஐ.. பின்னணி என்ன?

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் அப்ரூவராக மாற விருப்பம் தெரிவித்த பணி நீக்கம் செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மனுச்செய்துள்ள நிலையில், அதை ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று சிபிஐ தரப்பில் எதிர்ப்பு ... மேலும் பார்க்க