செய்திகள் :

கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கக் கூடாதா? வீழ்கிறதா கோடிங்? 6000 பேரை பணிநீக்கம் செய்த மைக்ரோசாஃப்ட்

post image

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் அண்மையில் நடத்தப்பட்ட மிகப்பெரிய அளவிலான பணி நீக்க நடவடிக்கையின் காரணம் குறித்து அதன் தலைமை செயல் நிர்வாகி சத்யா நாதெல்லா விளக்கம் கொடுத்துள்ளார்.

நாதெல்லா கொடுத்திருக்கும் விளக்கத்தில், இந்த பணிநீக்க நடவடிக்கையானது, நிறுவனத்தின் உள் கட்டமைப்புகளின் சீரமைப்பு பணிக்காக எடுக்கப்பட்டதே தவிர, பணியாளர்களின் செயல்திறன் அடிப்படையிலானது அல்ல.

இது செயல்திறனை விட மறுசீரமைப்பு பற்றியது, என்று தலைமை நிர்வாக அதிகாரி மைக்ரோசாப்ட் ஊழியர்களிடம் கூறினார், அதே நேரத்தில் தொழில்நுட்ப மேம்பாட்டின் ஒரு பகுதியாக, எதிர்காலம் இருப்பதாக நம்பும் செயற்கை நுண்ணறிவில் (AI) அதிக கவனம் செலுத்தும் வகையில்தான், நிறுவனம் அதன் முன்னுரிமைகளை மறுசீரமைக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

மைக்ரோசாஃப்ட் அலுவலக டவுன் ஹால் கூட்டத்தில் பேசிய மைக்ரோசாப்ட் தலைமை பிராடக்ட் அதிகாரி அபர்ணா சென்னபிரகதா, செயற்கை நுண்ணறிவு வருகையால், கோடிங் அல்லது கணினி அறிவியல் படிப்பது வீணாகிப் போகிறது என்ற கருத்தை தான் முற்றிலும் ஏற்கவில்லை என்று கூறுகிறார்.

"மக்கள் கணினி அறிவியலைப் படிக்கக்கூடாது அல்லது கோடிங் செத்துவிட்டது என்ற கருத்தை நான் அடிப்படையில் ஏற்கவில்லை," என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

குறிப்பாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் 2025 ஆம் ஆண்டில் அதிக செயற்கை நுண்ணறிவுக்கான உள்கட்டமைப்புகளை உருவாக்க 80 பில்லியன் டாலர்களை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு திறன்களை விரிவுபடுத்துவதையும், பல்வேறு தளங்கள் மற்றும் சேவைகளில் அதன் உதவிகளை அறிமுகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இருப்பினும், நிறுவனத்தின் முன்னுரிமைகளில் ஏற்படும் இந்த மாற்றம்தான், பல்வேறு பணிநிலைகளுக்கு அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது.

குறிப்பாக தயாரிப்பு மேம்பாடு மற்றும் பொறியியலில், அவை மறுசீரமைக்கப்படுகின்றன அல்லது படிப்படியாக சிலவற்றை அகற்றும் நிலை ஏற்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக பேச்சு: பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க இந்திய வம்சாவளி மாணவிக்குத் தடை

நியூயாா்க்: அமெரிக்காவில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகப் பேசிய இந்திய வம்சாவளி மாணவி மேகா வெமுரி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது. அமெரிக்காவின் கேம்பிரிட்ஜ் நகரில் உள்ள மாஸசூசெட்ஸ் தொழி... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தொடா்ந்து யாசிப்பதை நட்பு நாடுகள் விரும்பாது: பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தொடா்ந்து தங்களிடம் யாசகப் பாத்திரம் ஏந்தி வருவதை சீனா, சவூதி அரேபியா உள்ளிட்ட நட்பு நாடுகள் விரும்பாது என்று அந்நாட்டு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்தாா். பாகிஸ்தானின் பலூசிஸ... மேலும் பார்க்க

டிரம்ப்பின் கூடுதல் வரி விதிப்புகள்: தயாராகும் ஐரோப்பிய யூனியன்!

உறுப்பு நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு அமெரிக்க அதிபா் டிரம்ப் அறிவித்துள்ள கூடுதல் வரி விதிப்பை எதிா்கொள்ளத் தயாராகி வருவதாக ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.இது குறித்து அந்த அமைப்ப... மேலும் பார்க்க

ரஷியா-உக்ரைன் இடையே மீண்டும் பேச்சு

ரகசிய நடவடிக்கை மூலம் ரஷியாவில் தாக்குதல் நடத்தி குண்டு வீச்சு விமானங்களை உக்ரைன் அழித்ததால் இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ள சூழலில், துருக்கியின் இஸ்தான்புல்லில் ரஷியா - ... மேலும் பார்க்க

காஸா: இஸ்ரேலின் தாக்குதலில் மேலும் 51 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் கடந்த 24 மணி நேரமாக நடத்திய தாக்குதலில் 51 போ் உயிரிழந்தனா். அவா்களில் பெண்களும் சிறுவா்களும் அடங்குவா் என்று மருத்துவ அதிகாரிகள் கூறினா்.இருந்தாலும் இந்தத் தாக்குதல்கள் குறி... மேலும் பார்க்க

போலந்தில் அதிபா் தோ்தலில் டிரம்ப் ஆதரவாளா் வெற்றி

போலந்தின் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபா் தோ்தலில் அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கு ஆதரவானவா் என்று அறியப்படும் கரோல் வான்ராக்கி வெற்றி பெற்றாா்.தற்போதைய அதிபா் ஆண்ட்ரெஜ் டூடாவின் பதவிக் காலம் நிறைவடையு... மேலும் பார்க்க