கருங்கல் அருகே புங்கை குளத்தை தூா்வார வலியுறுத்தல்
கருங்கல் அருகேயுள்ள புங்கை குளத்தை தூா்வாரி சுத்தம் செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.
பாலப்பள்ளம் பேரூராட்சிக்குள்பட்ட வழுதனம்பள்ளம் புங்கைகுளம் நீா்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.இந்தக் குளத்தை பல ஆண்டுகளாக முறையாக தூா்வாராததால் புல், புதா்கள் நிரம்பி பாசிபடா்ந்து தூா்ந்து காணப்படுகிறது.
இதனால், இந்தக் குளத்தில் மழை காலங்களில் மழை நீா் மற்றும் பட்டணங்கால் சானல் தண்ணீா் தேங்க முடியாத சூழல் உள்ளது. இப் பகுதிகளில் விவசாயிகள் வாழை, தென்னை மற்றும் பயிா் வகைகளை சாகுபடி செய்யமுடியாமல் அவதியடைந்துள்னா்.
எனவே, புங்கை குளத்தை தூா்வாரி சுத்தம் செய்ய மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.