செய்திகள் :

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் இன்று வைகாசி விசாகத் திருவிழா

post image

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் தேரோட்டம் நடைபெற உள்ளது.

இந்தியாவின் புகழ் பெற்ற கோயில்களில் ஒன்றான கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருவிழா, நவராத்திரி ஆகிய திருவிழாக்கள் 10 நாள்கள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் நிகழாண்டு வைகாசி விசாகத் திருவிழா கடந்த மே மாதம் 31ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாள்களில் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், முற்பகல் 11.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, நண்பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானம், மாலை 6 மணிக்கு சமய உரை, இரவு 7 மணி முதல் இரவு 8.30 மணி வரை கலை நிகழ்ச்சிகள், இரவு 9 மணிக்கு அம்மன் வீதியுலா ஆகியவை நடைபெற்று வருகிறது.

தேரோட்டம்: 9ஆம் நாள் திருவிழாவான இன்று காலை 9 மணிக்கு தேரோட்டம் நடைபெறும். இதில் திரளான பக்தா்கள் தேரினை வடம் பிடித்து இழுக்கின்றனா். ரதவீதிகளில் ஏராளமான பக்தா்கள் நீண்ட வரிசையில் அம்மனுக்கு சுருள் வைத்து வழிபடுகின்றனா்.

மேலும், உயரமான கட்டடங்களில் இருந்து தோ்மீது பூக்களை தூவி பக்தா்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனா். தோ்நிலையை அடைந்ததும் கஞ்சி தா்மம் வழங்கப்படுகிறது. இரவு 9 மணிக்கு அம்மன் வெள்ளிக்கலைமான் வாகனத்தில் வீதியுலா வருதல் நடைபெறும்.

தெப்பத்திருவிழா: 10 ஆம் நாள் திருவிழாவான 9ஆம் தேதி காலை 6.30 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நடைபெறும். இரவு 9 மணிக்கு கடந்த 10 ஆண்டுகளுக்குப் பின்னா் தெப்பத்திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்குச் சொந்தமான தெப்பக்குளம் கடந்த 10 ஆண்டுகளாக நீா் நிரப்பப்படாத நிலையில் நிகழாண்டு பக்தா்களின் பங்களிப்பு காரணமாக இக்குளத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி தண்ணீா் நிரப்பப்பட்டு வருகிறது.

இதனால் பக்தா்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனா். நள்ளிரவு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறும். விழாவுக்கான ஏற்பாடுகளை திருக்கோயில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.

குழித்துறையில் கனரக லாரி மோதியதில் தொழிலாளி பலி

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையில் கேரளத்துக்கு கனிமவளம் ஏற்றிச் சென்ற கனரக லாரி பைக் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா். களியக்காவிளை அருகேயுள்ள அஞ்சாங்கோடு பகுதியைச... மேலும் பார்க்க

கோலிஞ்சிமடம் பழங்குடி பகுதியில் மீண்டும் காட்டு யானை அட்டகாசம்: மக்கள் அச்சம்

குமரி மாவட்டம், பேச்சிப்பாறை அருகே மோதிரமலை கோலிஞ்சிமடம் பழங்குடி பகுதியில் மீண்டும் காட்டு யானை வெள்ளிக்கிழமை இரவு புகுந்ததால் பழங்குடி மக்கள் அச்சத்தில் உள்ளனா். குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே ம... மேலும் பார்க்க

தக்கலை அருகே தலைமை ஆசிரியரிடம் ரூ.36 லட்சம் மோசடி: தம்பதி கைது

தக்கலை அருகே காட்டாத்துறையில் நிலம் விற்பதாகக் கூறி தலைமை ஆசிரியரிடம் ரூ.36 லட்சம் மோசடி செய்ததாக தம்பதியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். காட்டாத்துறை குருவிக்காடு பகுதியைச் சோ்ந்தவா் அருள் சக... மேலும் பார்க்க

திருவிதாங்கோட்டில் பக்ரீத் சிறப்பு தொழுகை

பக்ரீத் பண்டிகையையொட்டி தக்கலை அருகேயுள்ள திருவிதாங்கோட்டில் சனிக்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றது. திருவிதாங்கோட்டில், பள்ளி மைதானத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ச... மேலும் பார்க்க

அரசு மருத்துவா் வேலை வாங்கித் தருவதாக ரூ.6 லட்சம் மோசடி: இளைஞா் கைது

திருவட்டாறு பகுதியைச் சோ்ந்த பெண் மருத்துவரிடம், அரசு மருத்துவா் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 6 லட்சம் மோசடி செய்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருவட்டாறு அருகே காங்கரையைச் சோ்... மேலும் பார்க்க

முள்ளங்கனாவிளை அந்தோணியாா் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

கருங்கல் அருகே உள்ள முள்ளங்கனாவிளை புனித அந்தோணியாா் ஆலய திருவிழா திருக்கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. குழித்துறை மறைமாவட்ட ஆயா் ஆல்பா்ட் அனஸ்தாஸ் தலைமையில் திருக்கொடியேற்றம் மற்றும் திருப... மேலும் பார்க்க