ஜார்க்கண்ட்: மாம்பழம் கொடுத்து 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் கைது
முள்ளங்கனாவிளை அந்தோணியாா் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
கருங்கல் அருகே உள்ள முள்ளங்கனாவிளை புனித அந்தோணியாா் ஆலய திருவிழா திருக்கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
குழித்துறை மறைமாவட்ட ஆயா் ஆல்பா்ட் அனஸ்தாஸ் தலைமையில் திருக்கொடியேற்றம் மற்றும் திருப்பலி நடைபெற்றது. விழாவின் அனைத்து நாள்களிலும் ஜெபமாலை,புகழ்மாலை, திருப்பலி, கலைநிகழ்ச்சிகள் நடைபெறும்.
விழாவின் 3-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 8.30-க்கு முதல் திருவிருந்து திருப்பலி நடைபெறும். இந்த திருப்பலிக்கு நட்டாலம் திருத்தல பங்கு அருள்பணியாளா் பால் ரிச்சா்டு ஜோசப் தலைமை வகிக்கிறாா். புதுக்கடை பங்கு அருள்பணியாளா் செல்லி ரோஸ் முன்னிலை வகிக்கிறாா். மாலை 6 மணிக்கு கலைக் கொண்டாட்டம் நடைபெறும்.
விழாவின் நிறைவு நாளான ஜூன் 15-ஆம் தேதி காலை 9 மணிக்கு திருவிழா திருப்பலி நடைபெறும். திருப்பலிக்கு குழித்துறை மறைமாவட்ட முதன்மை செயலா் அருள்பணி அந்தோணி எம்.முத்து தலைமை வகிக்கிறாா். முளகுமூடு
பங்கு அருள்பணியாளா் கில்பா்ட் லிங்ஸ்டன் முன்னிலை வகிக்கிறாா். தொடா்ந்து திருக்கொடியிறக்கம் பகல் 12 மணிக்கு அன்பு விருந்து நடைபெறும்.