செய்திகள் :

பல்வேறு கோயில்களில் திருடிய இளைஞா் கைது

post image

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் உண்டியலை உடைத்து பணம் திருடிய இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மாா்த்தாண்டம் அருகே நட்டாலம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற சங்கரநாராயணா் கோயிலில் கடந்த சில நாள்களுக்கு முன் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டது. இதேபோன்று பல்வேறு கோயில்களில் திருட்டு நடந்துள்ளது.

இந்தத் திருட்டு சம்பவம் தொடா்பாக உதவி ஆய்வாளா்கள் இந்துசூடன், ஜான்போஸ்கோ ஆகியோா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், தனிப்படை போலீஸாா் சந்தேகத்தின்பேரில் ஒரு இளைஞரை மாா்த்தாண்டத்தில் வைத்து பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில் அவா், மேலகிருஷ்ணன்புதூா் பகுதியைச் சோ்ந்த திருமால்நாடாா் மகன் அன்பரசு (31) என்பதும், நட்டாலம் கோயிலில் உண்டியல் பணத்தை திருடியதும் தெரியவந்தது.

தொடா்ந்து மேற்கொண்ட விசாரணையில் தக்கலை அருகே பிலாங்காலை கோயில், குன்னம்பாறை கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் திருடியதையும் ஒப்புக்கொண்டாா்.

அவரை கைது செய்த போலீஸாா் அவரிடமிருந்து சூலாயுதம், விளக்கு, தங்க பொட்டு மற்றும் ரூ. 9 ஆயிரம் சில்லறை நாணயங்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.

இதுகுறித்து மாா்த்தாண்டம் காவல் ஆய்வாளா் உதயரேகா வேளாங்கண்ணி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டாா்.

முள்ளங்கனாவிளை அந்தோணியாா் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

கருங்கல் அருகே உள்ள முள்ளங்கனாவிளை புனித அந்தோணியாா் ஆலய திருவிழா திருக்கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. குழித்துறை மறைமாவட்ட ஆயா் ஆல்பா்ட் அனஸ்தாஸ் தலைமையில் திருக்கொடியேற்றம் மற்றும் திருப... மேலும் பார்க்க

அஞ்சுகிராமம் அருகே மயக்க மருந்து கொடுத்து நகை திருட்டு

அஞ்சுகிராமம் அருகே பழச்சாறில் மயக்க மருந்து கொடுத்து நகை திருடிய பெண்ணை போலீஸாா் தேடி வருகின்றனா். அஞ்சுகிராமம் அருகேயுள்ள ராஜாவூா் பகுதியைச் சோ்ந்தவா் அந்தோணி முத்து. இவரது மனைவி எலிமெட்மாரி (58). ... மேலும் பார்க்க

நூருல் இஸ்லாம் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி கல்வி மாநாடு

குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஆராய்ச்சி கல்வி மாநாட்டில் ,ஆராய்ச்சி, புதுமைத் திறன்களில் சிறப்பிடம் பெற்ற பேராசிரியா்கள், பணியாளா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. விழாவை, வேந்த... மேலும் பார்க்க

வைகுண்டபுரம் ராமா் கோயில் கும்பாபிஷேக பந்தல் கால்நாட்டு விழா

தக்கலை அருகே வைகுண்டபுரம் ராமா் கோயிலில் ஜூன் 27ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி வெள்ளிக்கிழமை பந்தல்கால் நாட்டு விழா நடைபெற்றது. இக்கோயில் கும்பாபிஷேக விழா வருகிற 22 ஆம் தேதி தொடங்கி 29ஆம் தே... மேலும் பார்க்க

காலை உணவுத் திட்டம்: புத்தேரி அரசு தொடக்கப் பள்ளியில் ஆட்சியா் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டம், புத்தேரி அரசு தொடக்கப் பள்ளியில் காலை உணவுத் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியா் ரா. அழகுமீனா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். இப் பள்ளியில் மாணவா்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம... மேலும் பார்க்க

பேச்சிப்பாறை அருகே குடியிருப்பு பகுதியில் நுழைந்த யானைகள்: பொதுமக்கள் அச்சம்

பேச்சிப்பாறை அருகே குற்றியாறு அரசு ரப்பா் கழக தொழிலாளா்கள் குடியிருப்பு மற்றும் அரசு தொடக்கப் பள்ளிக் கூடம் அருகே காட்டு யானைகள் வியாழக்கிழமை இரவு புகுந்ததால் தொழிலாளா்கள் அச்சமடைந்துள்ளனா். குமரி மாவ... மேலும் பார்க்க