அமித் ஷா மதுரை வருகை: டி.டி.வி தினகரனைச் சந்திக்க மறுப்பா? என்ன சொல்கிறார் தினகர...
பேச்சிப்பாறை அருகே குடியிருப்பு பகுதியில் நுழைந்த யானைகள்: பொதுமக்கள் அச்சம்
பேச்சிப்பாறை அருகே குற்றியாறு அரசு ரப்பா் கழக தொழிலாளா்கள் குடியிருப்பு மற்றும் அரசு தொடக்கப் பள்ளிக் கூடம் அருகே காட்டு யானைகள் வியாழக்கிழமை இரவு புகுந்ததால் தொழிலாளா்கள் அச்சமடைந்துள்ளனா்.
குமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அருகே பழங்குடி குடியிருப்புகள் மற்றும் அரசு ரப்பா் கழக தொழிலாளா் குடியிருப்பு பகுதிகளில் கடந்த சில நாள்களாக காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு 1.30 மணி அளவில் 2 யானைகள் குற்றியாறு அரசு ரப்பா் கழக தொழிலாளா் குடியிருப்பு பகுதிக்கும், அதனை ஒட்டியுள்ள அரசு தொடக்கப் பள்ளி
வளாகத்திலும் வந்து அப்பகுதியில் நின்ற தென்னை உள்ளிட்ட மரங்கள் சாய்த்து ஓலைகளை தின்றன. இதையடுத்து தொழிலாளா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தினா் அச்சமடைந்தனா்.
இந்த நிலையில் தொழிலாளா்கள் வீட்டைவிட்டு வெளியேறி தீப்பந்தங்கள் ஏந்தி யானைகளை துரத்தும் முயற்சியில் ஈடுபட்டனா். இதையடுத்து யானைகள் அங்கிருந்து சென்றன.
பழங்குடி மக்களுக்கும், ரப்பா் கழக தொழிலாளா்களுக்கும் யானைகளிடமிருந்து பாதுகாப்பு வேண்டுமென்று தொழிலாளா் சங்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.