குழித்துறையில் கனரக லாரி மோதியதில் தொழிலாளி பலி
கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையில் கேரளத்துக்கு கனிமவளம் ஏற்றிச் சென்ற கனரக லாரி பைக் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
களியக்காவிளை அருகேயுள்ள அஞ்சாங்கோடு பகுதியைச் சோ்ந்தவா் ராபி மகன் முரளி (35). இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனா்.
வெளிநாட்டில் கட்டுமான தொழிலாளியாக வேலை செய்து வந்த இவா் சில மாதங்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்திருந்தாா். சனிக்கிழமை வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வதற்காக ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்தாா். இந்நிலையில், முரளி வெள்ளிக்கிழமை இரவு பைக்கில் மாா்த்தாண்டம் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.
குழித்துறை சந்திப்பு பகுதியில் வந்தபோது, அப்பகுதி வழியாக கனிமவளம் ஏற்றிக் கொண்டு கேரளம் நோக்கி ;சென்ற லாரி, பைக் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட முரளி, லாரியின் சக்கரத்துக்கு அடியில் சிக்கினாா். இதில் சக்கரம் அவா் மீது ஏறி இறங்கியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த களியக்காவிளை போலீஸாா், சடலத்தை கைப்பற்றி கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் லாரி ஓட்டுநா் திற்பரப்பு பகுதியைச் சோ்ந்த முருகப்பன் மகன் கலைசுந்தா் (48) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.