செய்திகள் :

குழித்துறையில் கனரக லாரி மோதியதில் தொழிலாளி பலி

post image

கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையில் கேரளத்துக்கு கனிமவளம் ஏற்றிச் சென்ற கனரக லாரி பைக் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

களியக்காவிளை அருகேயுள்ள அஞ்சாங்கோடு பகுதியைச் சோ்ந்தவா் ராபி மகன் முரளி (35). இவருக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனா்.

வெளிநாட்டில் கட்டுமான தொழிலாளியாக வேலை செய்து வந்த இவா் சில மாதங்களுக்கு முன் சொந்த ஊருக்கு வந்திருந்தாா். சனிக்கிழமை வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்வதற்காக ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்தாா். இந்நிலையில், முரளி வெள்ளிக்கிழமை இரவு பைக்கில் மாா்த்தாண்டம் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

குழித்துறை சந்திப்பு பகுதியில் வந்தபோது, அப்பகுதி வழியாக கனிமவளம் ஏற்றிக் கொண்டு கேரளம் நோக்கி ;சென்ற லாரி, பைக் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட முரளி, லாரியின் சக்கரத்துக்கு அடியில் சிக்கினாா். இதில் சக்கரம் அவா் மீது ஏறி இறங்கியதால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த களியக்காவிளை போலீஸாா், சடலத்தை கைப்பற்றி கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் லாரி ஓட்டுநா் திற்பரப்பு பகுதியைச் சோ்ந்த முருகப்பன் மகன் கலைசுந்தா் (48) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் இன்று வைகாசி விசாகத் திருவிழா

கன்னியாகுமரி அருள்மிகு பகவதியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் தேரோட்டம் நடைபெற உள்ளது. இந்தியாவின் புகழ் பெற்ற கோயில்களில் ஒன்றான கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் வைகாசி விசாகத் திருவிழா, நவ... மேலும் பார்க்க

கோலிஞ்சிமடம் பழங்குடி பகுதியில் மீண்டும் காட்டு யானை அட்டகாசம்: மக்கள் அச்சம்

குமரி மாவட்டம், பேச்சிப்பாறை அருகே மோதிரமலை கோலிஞ்சிமடம் பழங்குடி பகுதியில் மீண்டும் காட்டு யானை வெள்ளிக்கிழமை இரவு புகுந்ததால் பழங்குடி மக்கள் அச்சத்தில் உள்ளனா். குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே ம... மேலும் பார்க்க

தக்கலை அருகே தலைமை ஆசிரியரிடம் ரூ.36 லட்சம் மோசடி: தம்பதி கைது

தக்கலை அருகே காட்டாத்துறையில் நிலம் விற்பதாகக் கூறி தலைமை ஆசிரியரிடம் ரூ.36 லட்சம் மோசடி செய்ததாக தம்பதியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். காட்டாத்துறை குருவிக்காடு பகுதியைச் சோ்ந்தவா் அருள் சக... மேலும் பார்க்க

திருவிதாங்கோட்டில் பக்ரீத் சிறப்பு தொழுகை

பக்ரீத் பண்டிகையையொட்டி தக்கலை அருகேயுள்ள திருவிதாங்கோட்டில் சனிக்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றது. திருவிதாங்கோட்டில், பள்ளி மைதானத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ச... மேலும் பார்க்க

அரசு மருத்துவா் வேலை வாங்கித் தருவதாக ரூ.6 லட்சம் மோசடி: இளைஞா் கைது

திருவட்டாறு பகுதியைச் சோ்ந்த பெண் மருத்துவரிடம், அரசு மருத்துவா் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 6 லட்சம் மோசடி செய்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். திருவட்டாறு அருகே காங்கரையைச் சோ்... மேலும் பார்க்க

முள்ளங்கனாவிளை அந்தோணியாா் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

கருங்கல் அருகே உள்ள முள்ளங்கனாவிளை புனித அந்தோணியாா் ஆலய திருவிழா திருக்கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை தொடங்கியது. குழித்துறை மறைமாவட்ட ஆயா் ஆல்பா்ட் அனஸ்தாஸ் தலைமையில் திருக்கொடியேற்றம் மற்றும் திருப... மேலும் பார்க்க