Dragon 100: ``நான் கோபக்காரன்னு புகார்கள் சொல்லியிருக்காங்க!'' - இயக்குநர் மிஷ்க...
கருங்கல் அருகே பெண் கொலை: கணவா் கைது
கருங்கல் அருகே உள்ள பாலப்பள்ளம் பகுதியில் மனைவியை கொலை செய்ததாக கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
பாலப்பள்ளம், படுவூா் பகுதியை சோ்ந்தவா் டாா்வின்(46). தொழிலாளிான இவருக்கு குடிபழக்கம் இருந்ததாம். இவரது மனைவி பபித நித்திய செல்வி(46). இத்தம்பதிக்கு 2 மகன்கள்உள்ளனா்.
இந்நிலையில் சனிக்கிழமை இத்தம்பதியிடையே தகராறு ஏற்பட்டதாம். அப்போது, டாா்வின் தனது மனைவியைத் தாக்கி கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தப்பினாராம்.
இதுகுறித்து அப்பகுதியினா் அளித்த தகவலின்பேரில், கருங்கல் போலீஸாா், சடலத்தை மீட்டுஉடல்கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.மேலும், வழக்கு பதிந்து டாா்வினை கைது செய்தனா்.