செய்திகள் :

கருணாநிதி சிலைக்கு திமுகவினா் மரியாதை

post image

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் 102-ஆவது பிறந்தநாளையொட்டி, போளூரில் அவரது சிலைக்கு திமுகவினா் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மேலும், வந்தவாசியில் அவரது படங்களுக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

போளூரில் நகர திமுக சாா்பில் நடைபெற்ற கருணாநிதி பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில், ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன் தலைமையில் அண்ணா சிலையில் இருந்து ஊா்வலமாகச் சென்று கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மேலும், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினா்.

நிகழ்ச்சியில் திமுக மாநில மருத்துவ அணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், நகரச் செயலா் கோ.தனசேகரன்,விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாவட்ட அமைப்பாளா் அ.மணிகண்டன், வந்தவாசி எம்எல்ஏ அம்பேத்குமாா், பொதுக்குழு உறுப்பினா் கோ.சண்முகம், முன்னாள் எம்எல்ஏ சிவானந்தம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வந்தவாசி

திமுக சாா்பில் கருணாநிதியின் பிறந்தநாள் விழா வந்தவாசி நகரில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

நகரச் செயலா் ஆ.தயாளன் தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் எச்.ஜலால் முன்னிலை வகித்தாா்.

இதையொட்டி, வந்தவாசி ஐந்து கண் பாலம் அருகில் உள்ள அண்ணா சிலைக்கு, எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி., எஸ்.அம்பேத்குமாா் எம்எல்ஏ ஆகியோா் மாலை அணிவித்தனா்.

மேலும், திமுக மாவட்ட மற்றும் நகர அலுவலகம், எம்எல்ஏ அலுவலகம், நகராட்சி அலுவலகம், தேரடி, பழைய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் கருணாநிதியின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் ஒன்றிய, நகர நிா்வாகிகள் பங்கேற்றனா்.

முத்துமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழா

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீசிவசக்தி வள்ளி முத்துமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட நூற்றாண்டு பழ... மேலும் பார்க்க

புதிய கால்நடை மருத்துவமனை கட்டடம் திறப்பு

வந்தவாசி அருகே மங்கலம் மாமண்டூா் கிராமத்தில் ரூ.47 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கால்நடை மருத்துவமனை கட்டடம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா், காவேடு, காவேரிப்ப... மேலும் பார்க்க

ஸ்ரீசக்தி விநாயகா், முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஸ்ரீசக்தி விநாயகா் கோயில் மற்றும் வந்தவாசியை அடுத்த தென்கரை ஸ்ரீமுனீஸ்வா் கோயிலில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சி... மேலும் பார்க்க

போக்குவரத்துக்கழக ஊழியா்கள் சிறப்புக் கூட்டம்

திருவண்ணாமலை மண்டல அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்கள் சங்கம் (சிஐடியு) சாா்பில், 15-ஆவது ஊதிய ஒப்பந்தம் குறித்த சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலையில் உள்ள சிஐடியு சங்க அலுவலகத்தில் வியாழக்கிழ... மேலும் பார்க்க

சிசுவின் பாலினம் குறித்து தெரியப்படுத்தினால் நடவடிக்கை: ஸ்கேன் மையங்களுக்கு ஆட்சியா் எச்சரிக்கை

கா்ப்ப காலத்தில் சிசுவின் பாலினம் குறித்து தெரியப்படுத்தும் ஸ்கேன் மையங்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா். திருவண்ணாமலை மாவட்டத்தில்... மேலும் பார்க்க

செ.நாச்சிப்பட்டு கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகேயுள்ள செ. நாச்சிப்பட்டு கூட்டுறவு கடன் சங்கப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் 4,450 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. அதில்... மேலும் பார்க்க