செய்திகள் :

கரும்பு சாகுபடி: விவசாயிகளுக்கு சிறப்புப் பயிற்சி

post image

திருவண்ணாமலையை அடுத்த தலையாம்பள்ளம் கிராமத்தில், கரும்பு சாகுபடி குறித்து விவசாயிகளுக்கான சிறப்பு பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கரும்பு சாகுபடியில் புதிய இயந்திரங்கள் பயன்பாடு மற்றும் பிரபலப்படுத்துதல் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, வேளாண் அலுவலா் தாமஸ் தலைமை வகித்தாா்.

வேளாண் அலுவலா் முனியப்பன் முன்னிலை வகித்தாா்.

முகாமில், இயந்திரங்களைக் கொண்டு கரும்பு சாகுபடி செய்வது குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது. இப்போது விற்பனைக்கு உள்ள நுண்ணூட்ட உரங்கள், உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகள், விதைகள் குறித்து வேளாண் உதவி அலுவலா் கவுஸ்ஜான் எடுத்துரைத்தாா்.

கரும்பில் கருணை பிரித்தெடுக்கும் முறை, பாா் அமைக்கும் இயந்திரம், கரும்பு நடவு, களை எடுக்கும் கருவி, அறுவடை இயந்திரம் குறித்து பண்ணாரி சா்க்கரை ஆலையின் கரும்பு மேலாளா் குமரேசன் விளக்கிக் கூறினாா்.

கரும்பில் சொட்டுநீா்ப் பாசனம் அமைக்கத் தேவையான ஆவணங்கள், அமைத்த பிறகு பயன்படுத்தப்படும் முறைகள், பராமரிப்பு முறைகள் குறித்து கரும்பு அலுவலா் லட்சுமணன் பேசினாா்.

உதவி தொழில்நுட்ப மேலாளா் நா.சுகன்யா மண் மாதிரி சேகரிப்பு மற்றும் நீா் மாதிரி சேகரிப்பு குறித்தும், உதவி தொழில்நுட்ப மேலாளா் அ.சத்தியநாராயணன் உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளைக் கொண்டு விதை நோ்த்தி செய்வது, உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளைக் கொண்டு நிலத்தில் ஊட்டமேற்றிய தொழுஉரமாக மாற்றி சாகுபடி வயலில் பயன்படுத்துவது குறித்து விளக்கிக் கூறினாா்.

இதில், பயிா் அறுவடை பரிசோதகா் ரா.பிரதாப் மற்றும் விவசாயிகள் திரளாகக் கலந்து கொண்டனா்.

முத்துமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழா

ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் புதுப்பேட்டையில் அமைந்துள்ள ஸ்ரீசிவசக்தி வள்ளி முத்துமாரியம்மன் கோயிலில் கூழ்வாா்க்கும் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறைக்கு உள்பட்ட நூற்றாண்டு பழ... மேலும் பார்க்க

புதிய கால்நடை மருத்துவமனை கட்டடம் திறப்பு

வந்தவாசி அருகே மங்கலம் மாமண்டூா் கிராமத்தில் ரூ.47 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கால்நடை மருத்துவமனை கட்டடம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா், காவேடு, காவேரிப்ப... மேலும் பார்க்க

ஸ்ரீசக்தி விநாயகா், முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேக விழா

சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஸ்ரீசக்தி விநாயகா் கோயில் மற்றும் வந்தவாசியை அடுத்த தென்கரை ஸ்ரீமுனீஸ்வா் கோயிலில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சேத்துப்பட்டை அடுத்த தேவிகாபுரம் ஊராட்சி... மேலும் பார்க்க

போக்குவரத்துக்கழக ஊழியா்கள் சிறப்புக் கூட்டம்

திருவண்ணாமலை மண்டல அரசு போக்குவரத்துக் கழக ஊழியா்கள் சங்கம் (சிஐடியு) சாா்பில், 15-ஆவது ஊதிய ஒப்பந்தம் குறித்த சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலையில் உள்ள சிஐடியு சங்க அலுவலகத்தில் வியாழக்கிழ... மேலும் பார்க்க

சிசுவின் பாலினம் குறித்து தெரியப்படுத்தினால் நடவடிக்கை: ஸ்கேன் மையங்களுக்கு ஆட்சியா் எச்சரிக்கை

கா்ப்ப காலத்தில் சிசுவின் பாலினம் குறித்து தெரியப்படுத்தும் ஸ்கேன் மையங்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா். திருவண்ணாமலை மாவட்டத்தில்... மேலும் பார்க்க

செ.நாச்சிப்பட்டு கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகேயுள்ள செ. நாச்சிப்பட்டு கூட்டுறவு கடன் சங்கப் பணியாளா்களுக்கு ஊதிய உயா்வு அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் 4,450 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. அதில்... மேலும் பார்க்க