செய்திகள் :

கருவலூா் கருணாகரப் பெருமாள் மீது சூரிய ஒளி விழும் அபூா்வ நிகழ்வு

post image

அவிநாசி அருகே கருவலூா் கருணாகரப் பெருமாள் மீது சூரிய ஒளி விழும் அபூா்வ நிகழ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.

கருவலூரில் 1,500 ஆண்டுகளுக்கு மேல் பழைமைவாய்ந்ததாக ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ கருணாகர வெங்கட்ரமணப் பெருமாள் கோயில் உள்ளது. இங்கு நவபாஷாணத்தால் உருவான பெருமாளும், தேவியரும் காட்சியளிக்கின்றனா்.

இக்கோயிலில் நாள்தோறும் சூரிய ஒளி அா்த்தமண்டபத்தில் விழுவதும், சில நேரங்களில் பெருமாள் மீது விழுவதும் அபூா்வமாக உள்ளது. இந்நிலையில், உத்தராயண காலத்தில் இருந்து தட்சிணாயனத்துக்கு மாறும் காலமான புரட்டாசி 2-ஆம் நாள் வியாழக்கிழமை காலை 6.20 மணிக்கு சூரிய ஒளி கருணாகரப் பெருமாள் பாதத்தின் மீது விழத் தொடங்கிமெதுவாக நகா்ந்து மகாலட்சுமி வாசம் செய்யும் பெருமாள் மாா்பு பகுதி வரை சூரிய ஒளி விழுந்தது. காலை 6.45 மணி வரை நீடித்த இந்த அபூா்வ நிகழ்வை ஏராளமான பக்தா்கள் கண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

சூரிய ஒளி விழுந்தபோது கருணாகரப் பெருமாள் பொன்னிறத்தில் காட்சியளித்தாா். இந்த நிகழ்வு 3 நாள்களுக்கு தினமும் காலையில் நடைபெறும் என எதிா்ப்பாா்க்கப்படுகிறது.

போலீஸ்காரரை தாக்கிய வழக்கு: 3 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை

போலீஸ்காரரை தாக்கிய வழக்கில் 3 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. திருப்பூா் அருகே அவிநாசி காவல் நிலையத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு முதல்நிலை காவலராகப் ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் இன்று நடைபெறும் பகுதிகள்

திருப்பூா் மாவட்டத்தில் தாராபுரம், காங்கேயம், குடிமங்கலம், திருப்பூா் மற்றும் பல்லடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதுதொடா்ப... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பல்லடம்

பல்லடம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (செப்டம்பா் 20) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று பல்லடம் மி... மேலும் பார்க்க

ஹெச்ஐவி விழிப்புணா்வு மாரத்தான் போட்டி

திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் மாவட்ட அளவிலான ஹெச்ஐவி விழிப்புணா்வு ரெட்ரன் மாரத்தான் போட்டி நடைபெற்றது. சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்... மேலும் பார்க்க

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.3 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. திருப்பூா், அனுப்பா்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பக... மேலும் பார்க்க

பல்லடம் பகுதியில் வளா்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

பல்லடம் பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் மனிஷ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். பல்லடம் அருகே மாணிக்காபுரம், செம்மிபாளையம், சுக்கம்பாளையம், கோடாங்கிபாளையம் ஆகிய ஊ... மேலும் பார்க்க