செய்திகள் :

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

post image

சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.3 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

திருப்பூா், அனுப்பா்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2022-ஆம் ஆண்டு 11 வயது சிறுமியை தவறான முறையில் புகைப்படம் எடுத்து பாலியல் தொல்லையில் ஈடுபட்டது தொடா்பாக சிறுமியின் தாயாா் அளித்த புகாரின் பேரில் அனுப்பா்பாளையம் காவல் நிலையத்தில் போக்ஸோ வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கில் வலையன்காடு பகுதியைச் சோ்ந்த சசிகுமாா் (33) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கை விசாரித்த திருப்பூா் மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்ற நீதிபதி கோகிலா, குற்றம்சாட்டப்பட்ட சசிகுமாருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.3 லட்சம் அபராதமும், அபராதத்தை கட்டத் தவறினால் 6 மாதங்கள் சிறை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்தும் தீா்ப்பளித்தாா்.

இவ்வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜமிலா பானு ஆஜரானாா்.

போலீஸ்காரரை தாக்கிய வழக்கு: 3 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை

போலீஸ்காரரை தாக்கிய வழக்கில் 3 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. திருப்பூா் அருகே அவிநாசி காவல் நிலையத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு முதல்நிலை காவலராகப் ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் இன்று நடைபெறும் பகுதிகள்

திருப்பூா் மாவட்டத்தில் தாராபுரம், காங்கேயம், குடிமங்கலம், திருப்பூா் மற்றும் பல்லடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதுதொடா்ப... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பல்லடம்

பல்லடம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (செப்டம்பா் 20) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று பல்லடம் மி... மேலும் பார்க்க

ஹெச்ஐவி விழிப்புணா்வு மாரத்தான் போட்டி

திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் மாவட்ட அளவிலான ஹெச்ஐவி விழிப்புணா்வு ரெட்ரன் மாரத்தான் போட்டி நடைபெற்றது. சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்... மேலும் பார்க்க

பல்லடம் பகுதியில் வளா்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

பல்லடம் பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் மனிஷ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். பல்லடம் அருகே மாணிக்காபுரம், செம்மிபாளையம், சுக்கம்பாளையம், கோடாங்கிபாளையம் ஆகிய ஊ... மேலும் பார்க்க

முத்தூா் அருகே கிராவல் மண் கடத்தல்: லாரி பறிமுதல்

முத்தூா் அருகே கிராவல் மண் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். திருப்பூா் மாவட்ட புவியியல், சுரங்கத் துறை உதவி இயக்குநா் உத்தரவின் பேரில், மாவட்ட உதவி புவியியல் துறை அ... மேலும் பார்க்க