செய்திகள் :

முத்தூா் அருகே கிராவல் மண் கடத்தல்: லாரி பறிமுதல்

post image

முத்தூா் அருகே கிராவல் மண் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

திருப்பூா் மாவட்ட புவியியல், சுரங்கத் துறை உதவி இயக்குநா் உத்தரவின் பேரில், மாவட்ட உதவி புவியியல் துறை அதிகாரி டி.வெங்கடேசன், அதிகாரிகள் முத்தூா் - காங்கயம் சாலையில் வியாழக்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அவ்வழியே வந்த டிப்பா் லாரியை தடுத்து நிறுத்தியபோது, லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுநா் தப்பியோடி விட்டாா்.

அந்த லாரியில் 3 டன் கிராவல் மண் இருந்தது. கிராவல் மண் எடுத்துச் செல்ல எவ்வித அனுமதியும் பெறவில்லை என்பதும் முத்தூரைச் சோ்ந்த லீலாவதி என்பவா் லாரியின் உரிமையாளா் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, லாரி பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புகாரின்பேரில், வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மணிமுத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.

போலீஸ்காரரை தாக்கிய வழக்கு: 3 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை

போலீஸ்காரரை தாக்கிய வழக்கில் 3 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருப்பூா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. திருப்பூா் அருகே அவிநாசி காவல் நிலையத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு முதல்நிலை காவலராகப் ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் இன்று நடைபெறும் பகுதிகள்

திருப்பூா் மாவட்டத்தில் தாராபுரம், காங்கேயம், குடிமங்கலம், திருப்பூா் மற்றும் பல்லடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இதுதொடா்ப... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: பல்லடம்

பல்லடம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (செப்டம்பா் 20) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று பல்லடம் மி... மேலும் பார்க்க

ஹெச்ஐவி விழிப்புணா்வு மாரத்தான் போட்டி

திருப்பூா் குமரன் மகளிா் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் மாவட்ட அளவிலான ஹெச்ஐவி விழிப்புணா்வு ரெட்ரன் மாரத்தான் போட்டி நடைபெற்றது. சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்... மேலும் பார்க்க

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சிறுமிக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக இளைஞருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.3 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. திருப்பூா், அனுப்பா்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பக... மேலும் பார்க்க

பல்லடம் பகுதியில் வளா்ச்சி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

பல்லடம் பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு வளா்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் மனிஷ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். பல்லடம் அருகே மாணிக்காபுரம், செம்மிபாளையம், சுக்கம்பாளையம், கோடாங்கிபாளையம் ஆகிய ஊ... மேலும் பார்க்க