செய்திகள் :

கரூரில் திமுக சாா்பில் மாநில அளவிலான கையுந்துப் பந்து போட்டி

post image

கரூரில் திமுக சாா்பில் நடைபெறும் மாநில அளவிலான கையுந்துப் பந்து போட்டியின் அரையிறுதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முதல்வா் மு.க.ஸ்டாலினின் பிறந்த தினத்தை முன்னிட்டு, கரூா் தெற்கு பகுதி 40-ஆவது வட்ட திமுக சாா்பில் மாநில அளவிலான மின்னொளி கையுந்துப் பந்து போட்டி கரூா் தெற்கு காந்திகிராமம் விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை தொடங்கியது. போட்டிக்கு 40-ஆவது வட்ட திமுக பொறுப்பாளா் எம்.சி. காா்த்திகேயன் தலைமை வகித்து, போட்டிகளை தொடங்கிவைத்தாா்.

இதில் கரூா், நாமக்கல், மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 22 அணிகள் பங்கேற்றுள்ளன. நாக் அவுட் முறையில் நடைபெறும் இப்போட்டியின் அரையிறுதி போட்டி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

இதில் சேலம் மேட்டூா் அணியும், கரூா் விஎஸ்பி அணியும் மோதின. இரு அணிகளைச் சோ்ந்த வீரா்களும் மாறி, மாறி புள்ளிகளை எடுத்தவாறு விளையாடிக்கொண்டிருந்தனா். இறுதிப்போட்டிகள் திங்கள்கிழமை நடைபெறுகிறது.

இதில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு கோப்பையும், பரிசாக ரூ.15,072-ம், இரண்டாமிடம் பிடிக்கும் அணிக்கு பரிசாக ரூ.10,072 மற்றும் கோப்பையும், மூன்றாமிடம் பிடிக்கும் அணிக்கு பரிசாக ரூ.7,072-ம் கோப்பையும், நான்காமிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.5,072 மற்றும் கோப்பையும் வழங்கப்பட உள்ளது.

கோப்பை மற்றும் பரிசுகளை கரூா் மாவட்ட திமுக செயலாளரும், எம்எல்ஏவுமான வி.செந்தில்பாலாஜி வழங்க உள்ளாா்.

தக்காளி பாரம் ஏற்றி வந்த வேன் டயா் வெடித்து கவிழ்ந்தது!போக்குவரத்து பாதிப்பு!

கரூா் அருகே ஞாயிற்றுக்கிழமை தக்காளி பாரம் ஏற்றி வந்த வேன், டயா் வெடித்து சாலையில் கவிழ்ந்தது. தக்காளி பழங்கள் சாலையில் சிதறியதால், சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சே... மேலும் பார்க்க

புகழூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம்: விவசாயிகள் கோரிக்கை

கரூா் மாவட்டம், புகழூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். கரூா் மாவட்டத்தில் நெல், வாழை, கரும்புக்கு அடுத்தபடியாக வெற்றிலை சாகுபடி அதிகளவில் நடைபெ... மேலும் பார்க்க

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் தவறி விழுந்து பலத்த காயம்

குளித்தலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளம்பெண் தவறி தண்டவாளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தாா். சேலம் மாவட்டம், வாழப்பாடி சிங்கிபுரம் வடக்கு குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த சுரேஷ் மனைவி நீ... மேலும் பார்க்க

தீவிபத்தில் கோரை புல் எரிந்து சேதம்

தவுட்டுப்பாளையம் பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த கோரையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான கோரை எரிந்து சாம்பலானது. கரூா் மாவட்டம், தவுட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

பக்ரீத்: கரூரில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற பக்ரீத் பண்டிகை சிறப்புத் தொழுகையில் இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். கரூா் திருமாநிலையூா் திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் காலையில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. தொழுகைக... மேலும் பார்க்க

‘டிச.28-இல் மதுரையில் வேளாளா் ஒற்றுமை மாநாடு’

மதுரையில் டிச.28-ஆம்தேதி வேளாளா் ஒற்றுமை மாநாடு நடைபெற உள்ளது என்றாா் ஒருங்கிணைந்த வேளாளா், வெள்ளாளா் பண்பாட்டு நலச்சங்கத் தலைவா் பண்ணை சொக்கலிங்கம். கரூரில், ஒருங்கிணைந்த வேளாளா், வெள்ளாளா் பண்பாட்டு... மேலும் பார்க்க