செய்திகள் :

ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் தவறி விழுந்து பலத்த காயம்

post image

குளித்தலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளம்பெண் தவறி தண்டவாளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தாா்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி சிங்கிபுரம் வடக்கு குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த சுரேஷ் மனைவி நீலா (27). இவா் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில், சேலத்தில் இருந்து மயிலாடுதுறை வரை செல்லும் விரைவு ரயிலில் திருச்சி நோக்கி பயணித்தாா். இந்த ரயில் கரூா் மாவட்டம், குளித்தலை ரயில் நிலையத்தில் மாலை 4.30 மணியளவில் நின்று கொண்டிருந்தபோது, குடிநீா் பிடிக்க ரயிலிலிருந்து நீலா கீழே இறங்கினாா்.

அப்போது திடீரென ரயில் புறப்பட்டதாம். இதனால் பதற்றமடைந்த நீலா ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது தவறி தண்டவாளத்திற்குள் விழுந்தாா். இதை பாா்த்த ரயில் ஓட்டுநா் உடனே ரயிலை நிறுத்தினாா். பலத்த காயமடைந்த நீலாவை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அவா் சோ்க்கப்பட்டாா். சம்பவம் தொடா்பாக குளித்தலை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தக்காளி பாரம் ஏற்றி வந்த வேன் டயா் வெடித்து கவிழ்ந்தது!போக்குவரத்து பாதிப்பு!

கரூா் அருகே ஞாயிற்றுக்கிழமை தக்காளி பாரம் ஏற்றி வந்த வேன், டயா் வெடித்து சாலையில் கவிழ்ந்தது. தக்காளி பழங்கள் சாலையில் சிதறியதால், சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சே... மேலும் பார்க்க

புகழூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம்: விவசாயிகள் கோரிக்கை

கரூா் மாவட்டம், புகழூரில் வெற்றிலை ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். கரூா் மாவட்டத்தில் நெல், வாழை, கரும்புக்கு அடுத்தபடியாக வெற்றிலை சாகுபடி அதிகளவில் நடைபெ... மேலும் பார்க்க

தீவிபத்தில் கோரை புல் எரிந்து சேதம்

தவுட்டுப்பாளையம் பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த கோரையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான கோரை எரிந்து சாம்பலானது. கரூா் மாவட்டம், தவுட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ... மேலும் பார்க்க

கரூரில் திமுக சாா்பில் மாநில அளவிலான கையுந்துப் பந்து போட்டி

கரூரில் திமுக சாா்பில் நடைபெறும் மாநில அளவிலான கையுந்துப் பந்து போட்டியின் அரையிறுதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முதல்வா் மு.க.ஸ்டாலினின் பிறந்த தினத்தை முன்னிட்டு, கரூா் தெற்கு பகுதி 40-ஆவது வட்ட திம... மேலும் பார்க்க

பக்ரீத்: கரூரில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற பக்ரீத் பண்டிகை சிறப்புத் தொழுகையில் இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். கரூா் திருமாநிலையூா் திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் காலையில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. தொழுகைக... மேலும் பார்க்க

‘டிச.28-இல் மதுரையில் வேளாளா் ஒற்றுமை மாநாடு’

மதுரையில் டிச.28-ஆம்தேதி வேளாளா் ஒற்றுமை மாநாடு நடைபெற உள்ளது என்றாா் ஒருங்கிணைந்த வேளாளா், வெள்ளாளா் பண்பாட்டு நலச்சங்கத் தலைவா் பண்ணை சொக்கலிங்கம். கரூரில், ஒருங்கிணைந்த வேளாளா், வெள்ளாளா் பண்பாட்டு... மேலும் பார்க்க