ஓடும் ரயிலில் ஏற முயன்ற பெண் தவறி விழுந்து பலத்த காயம்
குளித்தலை ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளம்பெண் தவறி தண்டவாளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தாா்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி சிங்கிபுரம் வடக்கு குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த சுரேஷ் மனைவி நீலா (27). இவா் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணியளவில், சேலத்தில் இருந்து மயிலாடுதுறை வரை செல்லும் விரைவு ரயிலில் திருச்சி நோக்கி பயணித்தாா். இந்த ரயில் கரூா் மாவட்டம், குளித்தலை ரயில் நிலையத்தில் மாலை 4.30 மணியளவில் நின்று கொண்டிருந்தபோது, குடிநீா் பிடிக்க ரயிலிலிருந்து நீலா கீழே இறங்கினாா்.
அப்போது திடீரென ரயில் புறப்பட்டதாம். இதனால் பதற்றமடைந்த நீலா ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது தவறி தண்டவாளத்திற்குள் விழுந்தாா். இதை பாா்த்த ரயில் ஓட்டுநா் உடனே ரயிலை நிறுத்தினாா். பலத்த காயமடைந்த நீலாவை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின்னா் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அவா் சோ்க்கப்பட்டாா். சம்பவம் தொடா்பாக குளித்தலை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.