செய்திகள் :

கரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் ரத யாத்திரைக்கு வர வேண்டாம்!

post image

கரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் ரத யாத்திரைக்கு வர வேண்டாம் என்று ஒடிசா சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஒடிசாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக நான்கு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரி தெரிவித்தார்.

நாட்டை அச்சுறுத்திவந்த கரோனா பாதிப்பு மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், கரோனா பாதிப்புகள் மெல்ல அதிகரித்து வருகின்றது. நாட்டில் கரோனா பாதிப்பு இதுவரை 6 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி, ஒடிசாவில் 15 பேர் தொற்றியிலிருந்து மீண்டுள்ள நிலையில், மொத்தம் 34 பேர் கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

புரி ஜெகந்நாதர் கோயிலின் ரத யாத்திரை திருவிழா ஜூன் 27ஆம் தேதி முதல் நிகழவுள்ள நிலையில், ரத யாத்திரைக்கான அனைத்து ஏற்பாடுகளும் முழு அளவில் செய்யப்பட்டு வருவதாகவும் அதேசமயம் கரோனா அறிகுறிகள் உள்ளவர்கள் ரத யாத்திரைக்கு வர வேண்டாம் என்றும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

முன்னதாக, மாநிலத்தில் ஜூன் 20 முதல் கல்வி நிறுவனங்கள் செயல்பட உள்ளதால் , கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு இணங்க பள்ளிகள் செயல்படும் என்று கல்வி அமைச்சர் நித்யானந்தா கோண்ட் தெரிவித்தார்.

கரோனா: பீதியடைய வேண்டாம், விழிப்புடன் இருப்போம் - மமதா

மேற்கு வங்கத்தில் கரோனா நிலைமையைக் குறித்து பீதியடைய வேண்டாம், ஆனால் விழிப்புடன் இருக்குமாறு அந்த மாநில முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார். கரோனா வைரஸின் மற்றொரு வெடிப்பைச் சமாளிக்க மாநிலத்தில் தய... மேலும் பார்க்க

4 மாதங்களாகியும் இழப்பீடு வழங்கப்படவில்லை! மகா கும்பமேளா நெரிசலில் பலியானோர் குடும்பங்கள் தவிப்பு!

உத்தரப் பிரதேசத்தில் கும்பமேளா கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு 4 மாதங்கள் ஆகியும் இன்னும் இழப்பீடு வழங்கவில்லை என அலாகாபாத் உயர்நீதிமன்ற வழக்கு மூலமாக தெரிய வந்துள்ளது. உத்தரப்... மேலும் பார்க்க

ஒரே நாளில் 358 பேருக்கு கரோனா: கேரளத்தில் அதிக பாதிப்பு!

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 358 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. நாட்டையே உலுக்கிய கரோனா பரவல் தொற்று முண்டும் தலைகாட்டத் தொடங்கியுள்ளது. வடம... மேலும் பார்க்க

மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு எச்சரிக்கை: குஜராத் உயர்நீதிமன்றத்தில் பரபரப்பு!

குஜராத் உயர்நீதிமன்றத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து வளாகம் முழுவதும் சோதனை மேற்கொண்டனர். சமீப காலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுவது தொடர் கதையாகி வருகின்றது. பள்ளிகள், கல்வி ந... மேலும் பார்க்க

கோழிக்கோடு அருகே நடுக்கடலில் சரக்குக் கப்பலில் தீ விபத்து!

கேரள மாநிலம், கோழிக்கோடு அருகே நடுக்கடலில் சிங்கப்பூரைச் சேர்ந்த சரக்குக் கப்பலில் திங்கள்கிழமை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.சிங்கப்பூர் நிறுவனத்தைச் சேர்ந்த எம்வி வான் ஹை 503 என்ற கப்பல், இலங்கையின் கொழு... மேலும் பார்க்க

மோடி அரசின் 11 ஆண்டுகள் = பொறுப்பின்மை + மாற்றமில்லை + வெறும் விளம்பரமே! ராகுல்

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை விமர்சித்துள்ளார்.பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பதவியேற்று ஓராண்டு முடிவுறும் நிலையில், பாஜக ... மேலும் பார்க்க