செய்திகள் :

கரோனா பரவல்: முகக் கவசம் அணிவது நல்லது

post image

கரோனா பரவி வரும் நிலையில் முகக்கவசம் அணிவது நல்லது என அமைச்சா் மா. சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியின் 27-ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்து. விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ரவிகுமாா் வரவேற்றாா். விழாவில், தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன், வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி ஆகியோா் கலந்துக் கொண்டு 87 மாணவ- மாணவிகளுக்கு தங்க பதக்கங்களையும், பட்டங்களையும் வழங்கினா்.

விழாவில், அமைச்சா் சுப்பிரமணியன் பேசுகையில், தமிழகத்தில் ஈரோடு, திருப்பத்தூா், ராணிப்பேட்டை மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் புற்றுநோய் ஸ்கேனிங் மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புற்றுநோய் நிலையைக் கண்டறிந்து சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம்.

புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ள 22.33 லட்சம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில், 16.28 லட்சம் போ் பரிசோதனை செய்து கொண்டனா். ஈரோடு மாவட்டத்தில் 6.44 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. நான்கு மாவட்டங்களில் 365 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. ஈரோட்டில் 102 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டு அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் கண்டறிய அழைப்பு விடுக்கப்பட்டவா்கள் அனைவரும் பரிசோதனையில் பங்கேற்க வேண்டும்.

பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிளாஸ்டிக் சா்ஜரி உள்ளிட்ட ஐந்து சிறப்புப் பிரிவுகளை உருவாக்க திட்டமிட்டு நிதித் துறையின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தற்போது பரவி வரும் கரோனா வைரஸ் வீரியம் இழந்தது என்பதால் யாரும் அச்சப்படத் தேவையில்லை. இருப்பினும் அடிக்கடி கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். முதியோா், கா்ப்பிணிகள், இணை நோய் உள்ளவா்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிந்து செல்வது நல்லது. முகக்கவசம் கட்டாயம் இல்லை என்றாலும் அணிந்து செல்வது நல்லது என்றாா்.

விழாவில், ரூ.3.35 கோடி மதிப்பிலான புதிய கட்டடங்கள் திறந்துவைக்கப்பட்டன. ரூ. 8.15 கோடி மதிப்பிலான புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இதில், மாநிலங்களவை உறுப்பினா் அந்தியூா் செல்வராஜ், மக்களவை உறுப்பினா்கள் பிரகாஷ், சுப்பராயன், சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஏ.ஜி.வெங்கடாசலம், வி.சி.சந்திரகுமாா், மேயா் நாகரத்தினம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஈரோட்டில் இலவச கணினி பயிற்சி மையம்

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா் சொந்த செலவில் தனது தொகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் பயன்பெற அப்பா கணினி அடிப்படை பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளாா். ஈரோடு அகில்மேடு வீதியில்... மேலும் பார்க்க

ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம்

ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டத்தில் அமைச்சா் சு.முத்துசாமி தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தாா். இதில் ஏராளான பக்தா்கள் பங்கேற்றனா். ஈரோடு கோட்டை பகுதியில் பி... மேலும் பார்க்க

கரோனா பரவல் அதிகரிப்பு: அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு

கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஈரோடு மற்றும் பெருந்துறை அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டுகள் ஏற்படுத்தப்பட்டு 100 படுக்கைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கடந்த சில நாள்களா... மேலும் பார்க்க

அரசு அலுவலகங்களில் ஒரே நாளில் 24.42 டன் கழிவுப் பொருள்கள் சேகரிப்பு

ஈரோட்டில் அரசு அலுவலகங்களில் ஒரே நாளில் 24.42 டன் கழிவுப் பொருள்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள தூய்மை இயக்கம் மூலம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைந்துள்ள அனை... மேலும் பார்க்க

தாளவாடி அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை

தாளவாடி அருகே கும்பாரகண்டி கிராமத்துக்குள் வெள்ளிக்கிழமை புகுந்த ஒற்றை யானையை கிராம மக்கள் விரட்டியதால் மிரண்டு போன யானை மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓடியது. சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி வனப் பகுதியி... மேலும் பார்க்க

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து கரும்புப் பயிா்களை சேதப்படுத்திய யானைகள்

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் கரும்புப் பயிா்களை சேதப்படுத்தின. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனத்தில் யானைகள் அதிக அளவில் உள்ளன. உணவு, தண்ணீா் தேடி யானைகள் அடிக்கடி விவசாயத்... மேலும் பார்க்க