செய்திகள் :

கர்ஜனை மொழி கனிமொழி, செயல் வீரர் செந்தில் பாலாஜி: மு.க. ஸ்டாலின்

post image

நாடாளுமன்றத்தில் பேசும்போது கனிமொழி, கர்ஜனை மொழியாக மாறுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், முப்பெரும் விழாவுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்துள்ள செயல் வீரர் செந்தில் பாலாஜி எனவும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

கரூர் மாவட்டம் கோடாங்கிப்பட்டியில் திமுகவின் முப்பெரும் விழா இன்று (செப். 17) பிரமாண்டமாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது,

''இது கரூர் அல்ல திமுகவூர். உயிரோடு கலந்திருக்கும் கலைஞர் கருணாநிதியை பிரதிபலிக்கும் தொண்டர்கள் இங்கு கூடியுள்ளனர்.

கொட்டும் மழையில்தான் திமுகவை தொடங்கி வைத்தார் அறிஞர் அண்ணா. தற்போது கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது முப்பெரும் விழாவுக்காக தொண்டர்கள் நிற்கின்றனர்.

கரூரில் முப்பெரும் விழா நடத்த வேண்டும் என செந்தில் பாலாஜி அனுமதி கேட்டார். நான் அனுமதி கொடுத்தேன். முப்பெரும் விழாவுக்கு சிறப்பாக ஏற்பாடுகளை சிறப்பாக செய்துள்ளார் செயல் வீரர் செந்தில் பாலாஜி. திமுக வரலாற்றில் இப்படியொரு முப்பெரும் விழா நடைபெற்றது இல்லை.

பொதுக்கூட்டம் எனக் கூறி மாபெரும் எழுச்சிக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார். மேற்கு மண்டலத்தின் எதிர்களுக்கு சிம்ம சொப்பனமாக உள்ள செந்தில் பாலாஜியை முடக்கப்பார்த்தனர்.

ஆனால், அவர் செய்ய வேண்டியவற்றை சிறப்பாக செய்து முடிப்பார்.

கனிமொழி பார்ப்பதற்குதான் கனிமொழி. நாடாளுமன்றத்தில் பேசினால் கர்ஜனை மொழி.

நாடே திரும்பிப் பார்க்கும் திராவிட மாடல் அரசை உருவாக்கி என்னை முதல்வராக்கியுள்ளீர்கள் மேடு பள்ளங்களை பரிசீலிக்க ஒன்றுகூடியுள்ளோம்'' எனப் பேசினார்.

இதையும் படிக்க | திமுக முப்பெரும் விழா தொடங்கியது! கனிமொழிக்கு பெரியார் விருதை வழங்கினார் ஸ்டாலின்!

TN Cm MK Stalin speech in mupperum vizha karur

இரவில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 26 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்... மேலும் பார்க்க

அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக்கியவர் இபிஎஸ்: முதல்வர் மு.க. ஸ்டாலின்

திராவிடக் கொள்கை தெரியாமல் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி உள்ளதாகவும், அண்ணாயிஸத்தை அடிமையிஸமாக்கியுள்ளதாகவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார். திமுகவுக்கு மாற்று, மாற்றம் என்று கூ... மேலும் பார்க்க

திமுக முப்பெரும் விழா தொடங்கியது! லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பு!

கரூரில் திமுக முப்பெரும் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா மேடைக்கு திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் வருகை தந்துள்ளார்.இந்த விழாவில் பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களின் படங்களுக்கு ... மேலும் பார்க்க

விஜய்க்கு கொள்கை, கோட்பாடு இல்லை; எனக்கும்தான் கூட்டம் வந்தது! - சரத்குமார்

உச்ச நடிகராக இருக்கும்போதுதான் தானும் அரசியலுக்கு வந்ததாகவும் 1996ல் தனக்கும் மாபெரும் கூட்டம் கூடியதாகவும் நடிகரும் பாஜக நிர்வாகியுமான சரத்குமார் கூறியுள்ளார். சென்னையில் பாஜக நிகழ்ச்சிக்குப் பின்னர்... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை, 28 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 28 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழ... மேலும் பார்க்க

ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் வழக்கு!

ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிராக சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் ... மேலும் பார்க்க