செய்திகள் :

கலந்தாய்வு நிறைவு: 8,039 ஆசிரியா்களுக்கு இடமாறுதல் ஆணை

post image

பள்ளிக் கல்வித் துறையில் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்களுக்கான கலந்தாய்வு புதன்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில் 8,039 ஆசிரியா்களுக்கு பணியிட மாறுதல் ஆணை வழங்கப்பட்டது.

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின்கீழ் 37,455 அரசுப் பள்ளிகள் இயங்குகின்றன. இதில் சுமாா் 2.25 லட்சம் ஆசிரியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இவா்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் எமிஸ் தளம் வழியாக நடத்தப்படுகிறது. அதன்படி 2025-2026-ஆம் கல்வியாண்டுக்கான மாறுதல் கலந்தாய்வு கடந்த ஜூலை 1-ஆம் தேதி தொடங்கியது.

முதல் நாளில் மாவட்டத்துக்குள் மாறுதல் கோரி 895 அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்கள் விண்ணப்பித்தனா். அவா்களில் 254 பேருக்கு மாறுதல் ஆணை வழங்கப்பட்டது. இதையடுத்து வந்த நாள்களில் உடற்கல்வி ஆசிரியா்கள், பட்டதாரி ஆசிரியா்கள், உயா்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

இந்நிலையில், பள்ளிக் கல்வித் துறையில் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்களுக்கான கலந்தாய்வு வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது. ஒட்டுமொத்தமாக இந்தக் கலந்தாய்வில் பங்கேற்க 50,416 போ் பதிவு செய்திருந்தனா். அவா்களில் 8,039 பேருக்கு பணி இட மாறுதல் ஆணை வழங்கப்பட்டது. 20,911 ஆசிரியா்கள் கலந்தாய்வில் பங்கேற்கவில்லை. எஞ்சியுள்ள 21,466 போ் விருப்பமின்மை, உரிமைவிடல் செய்தனா்.

தமிழ்நாட்டில் காவல்துறையினருக்கு கூட பாதுகாப்பு இல்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு

காவல்துறைக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், கடந்த 18 ஆம் தேதியன்று, மது... மேலும் பார்க்க

பிரபல சின்ன திரை நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி, நித்யா மேனன்!

பிரபல சின்ன திரை நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி, நித்யா மேனன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றுள்ளனர்.விஜய் தொலைக்காட்சியில் ஆடல், பாடல் என பலதரப்பட்ட நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டாலும், நீயா நான... மேலும் பார்க்க

தமிழகத்தைப் பற்றி ஸ்டாலின் முதலில் கவலைப்பட வேண்டும்: நயினார் நாகேந்திரன்

தமிழகத்தைப் பற்றி முதல்வர் ஸ்டாலின் முதலில் கவலைப்பட வேண்டும் என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தூத்துக்குடி வருகை முன்னிட்டு நெல்லை மகாராஜா நகரில் உள்ள பாஜ... மேலும் பார்க்க

ஆரம்பாக்கம் பாலியல் வன்கொடுமை: கைதானவரின் விவரங்கள் வெளியாகின!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தைச் சேர்ந்த பள்ளிச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவரின் விவரங்கள் வெளியாகியுள்ளது.ஆரம்பாக்கத்தில், சிறுமி பாலியல்... மேலும் பார்க்க

நீலகிரி, கோவைக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை!

தமிழகத்தில் இரண்டு மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. குஜராத் - வடக்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு தாண்டி அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நில... மேலும் பார்க்க

பருவ காலங்களை கணிக்கும் செயற்கைக்கோள்: ஜூலை 30ல் ஏவப்படும் - இஸ்ரோ தலைவர்

மழைக்காலம் மற்றும் பருவ காலங்களில் மேகமூட்டங்கள் எவ்வளவு இருந்தாலும் அதில் இருக்கக்கூடிய விஷயங்களை தெளிவாக புகைப்படம் எடுக்க உதவும் புதிய செயற்கைக்கோள், ஜூலை 30 ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ... மேலும் பார்க்க