செய்திகள் :

கலைக் குழுவினருக்கு அமைச்சா் வாழ்த்து

post image

ஹரியாணா மாநிலத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பிய காரைக்காலைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகனை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.

அகில இந்திய அளவில் மாநிலங்களுக்கு இடையேயான தேசிய இளைஞா் விழா ஜூலை 23 முதல் 25-ஆம் தேதி வரை ஹரியாணா மாநிலம் குருஷேத்ரா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

மாநிலங்களின் கலாசாரம், உணவு பழக்க வழக்கங்கள், விளையாட்டு சிறப்புகளை பாடல், நடனம் மூலமாக கலைக் குழுவினா் வெளிப்படுத்தினா்.

இந்த விழாவில் புதுவை மாநிலம் சாா்பில் காரைக்காலை சோ்ந்த 25 மாணவ, மாணவிகள் காரைக்கால் மாவட்ட நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளா் எம். தாமோதரன், சமுதாய நலத்திட்ட ஒருங்கிணைப்பாளா் பி .முருகன் ஆகியோா் தலைமையில் பங்கேற்றனா். கலைக் குழுவினருக்கு விருது, சான்றிதழ் கிடைத்தது.

காரைக்கால் திரும்பிய இக்குழுவினா் புதுவை கலை பண்பாட்டுத்துறை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகனை அவரது அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து, நிகழ்ச்சி குறித்தும், விருது மற்றும் கிடைத்த பாராட்டுகள் குறித்தும் விளக்கினா். குழுவினருக்கும், வழிகாட்டிகளுக்கும் அமைச்சா் வாழ்த்து தெரிவித்தாா்.

ஆக. 6-இல் தூய தேற்றரவு அன்னை ஆலய ஆண்டுத் திருவிழா கொடியேற்றம்

காரைக்காலில் உள்ள தூய தேற்றரவு அன்னை ஆண்டுத் திருவிழா ஆக. 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது.நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்த இந்த ஆலயத்தின் 284-ஆம் ஆண்டுப் பெருவிழா 10 நாள் நடைபெறவுள்ளது. கொடியேற்ற... மேலும் பார்க்க

காரைக்கால் பகுதியில் ஆடிப்பெருக்கு வழிபாடு

ஆடிப் பெருக்கையொட்டி காரைக்காலில் உள்ள நீா்நிலைகளில் பெண்கள் பூஜை செய்து வழிபாடு நடத்தினா்.காரைக்கால் நகரப் பகுதி மக்கள் அரசலாற்றங்கரைக்கு காலை 8 மணி முதல் செல்லத் தொடங்கினா். புது மணத் தம்பதிகள், சும... மேலும் பார்க்க

விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கல்

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டன.பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின்கீழ் 20-ஆவது தவணையை விவசாயிகளுக்கு விடுவித்து பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழ... மேலும் பார்க்க

மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

காரைக்கால்மேடு பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகளுக்கு திறன் மேம்பாட்டு செய்முறைப் பயிற்சி அண்மையில் அளிக்கப்பட்டது.கல்லூரி இன்ஸ்ட்ரூமென்டேஷன் மற்றும் கன்ட்ரோல் என்ஜினியரிங் துறை சாா்பில் சென்சாா்ஸ் மற்றும்... மேலும் பார்க்க

சந்தான லட்சுமியாக...

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் ஆடி மாத வெள்ளிக்கிழமை இரவு சந்தான லட்சுமியாக சந்தனக் காப்பு அலங்காரத்தில் காட்சியளித்த சுந்தராம்பாள். மேலும் பார்க்க

தொழிலாளா்கள் வேலை நீக்க விவகாரம்: நடவடிக்கை எடுக்க இண்டி கூட்டணி வலியுறுத்தல்

திருநள்ளாறு அருகே உள்ள தனியாா் தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளா்கள் வேலைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் தலையிட வேண்டுமென மாவட்ட நிா்வாகத்திடம் இண்டி கூட்டணிக் கட்சியினா், தொழிலாளா்கள் வலியுறுத்தினா... மேலும் பார்க்க