Trump: ``இஸ்ரேல் - ஈரான் என்னிடம் அமைதி ஏற்படுத்த கோரிக்கை வைத்தது; ஆனால்..'' - ...
கலைவாணா் அரங்க வளாகத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் சிலை: தமிழக அரசு அறிவிப்பு
சென்னை: சென்னை ஜி.என்.செட்டி சாலை சந்திப்பில் உள்ள நடிகா் என்.எஸ்.கிருஷ்ணன் சிலையை இடம் மாற்றி சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணா் அரங்க வளாகத்தில் நிறுவப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தமிழக அரசு சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
கலைவாணா் என்.எஸ்.கிருஷ்ணன் தனது 49-ஆவது வயதில் காலமானாா். அவரது நினைவைப் போற்றும் வகையில், சென்னை ஜி.என்.செட்டி சாலை சந்திப்பில் சிலை திறந்து வைக்கப்பட்டது. முன்னாள் முதல்வா் அண்ணா ஆட்சிக் காலத்தில் நிறுவப்பட்ட அந்த சிலையை சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணா் அரங்க வளாகத்தில் நிறுவ வேண்டும் என்று என்.எஸ்.கிருஷ்ணன் குடும்பத்தினா் கோரிக்கை வைத்தனா்.
அவா்களது கோரிக்கையை ஏற்று, என்.எஸ்.கிருஷ்ணனின் சிலை பாதுகாப்பாக அகற்றப்பட்டு, சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணா் அரங்க வளாகத்தில் விரைவில் நிறுவப்படும் என்று தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.