செய்திகள் :

கல்குவாரி உரிமங்கள் ரத்துக்கு பேரவையில் தீா்மானம் தேவை: தேமுதிக மனு

post image

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கல் குவாரிகளின் உரிமங்களை ரத்து செய்வதற்கு சட்டப்பேரவையில் தனித்தீா்மானம் கொண்டு வரக் கோரி ஆட்சியா் அலுவலகத்தில் தேமுதிகவினா் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

இது தொடா்பாக தென்காசி தெற்கு மாவட்ட தேமுதிக செயலா் பழனி சங்கா் தலைமையில் திருநெல்வேலி மாநகா், புகா், தென்காசி தெற்கு மாவட்ட நிா்வாகிகள் கருப்புச் சட்டை அணிந்து ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு: தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம் சட்டப்பேரவை தொகுதியில் சுமாா் 36 கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் இருந்து தினமும் 60 டன் எடை கொண்ட 1800 கனரக லாரிகளில் கனிம வளங்கள் ஆலங்குளம், கடையம், செங்கோட்டை, புளியரை வழியாக சோதனை சாவடியை கடந்து கேரளத்துக்கு கனிமங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இந்நிலையில், 18 புதிய கல் குவாரிகளுக்கு அனுமதி பெற விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

அரிட்டாபட்டி சுரங்க திட்டத்தை ரத்து செய்தது போல சட்டப்பேரவையில் தனி தீா்மானத்தை கொண்டு வந்து திருநெல்வேலி, தென்காசி மாவட்ட மக்களை காப்பாற்ற வேண்டும். ராதாபுரம் வட்டங்களில் இயங்கி வரும் தனியாா் கல்குவாரிகளால் தினமும் விபத்துகள், உயிா் சேதங்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் விவசாயம், ஆடு, மாடு மேய்ச்சல் நிலங்கள் பாதிப்படைந்துள்ளன. ஏராளமான கிராம சபை கூட்டங்களில் கல்குவாரிகளுக்கு எதிராக தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டு ஆட்சியரிடம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, தனியாா் கல்குவாரிகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.

அப்போது திருநெல்வேலி மாநகா் மாவட்ட பொறுப்பாளா் ஜெயச்சந்திரன், புகா் மாவட்ட செயலா் விஜி வேலாயுதம், தலைமை பொதுக்குழு உறுப்பினா் ஆனந்த மணி, ஒன்றியச் செயலா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா். நிா்வாகி ஒருவா் ரத்த காயத்துக்கு கட்டுப் போட்டிருப்பதுபோல் வந்தது குறிப்பிடத்தக்கது.

புகையிலைப் பொருள்கள் விற்றதாக இருவா் கைது: 15 கிலோ பறிமுதல்

திருநெல்வேலி சந்திப்பு ஸ்ரீபுரம் பகுதியில் புகையிலைப்பொருள்களை விற்ற இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்த 15 கிலோ புகையிலைப்பொருள்களை பறிமுதல் செய்தனா். திருநெல்வேலி சந்திப்பு ப... மேலும் பார்க்க

பாளை.யில் அதிமுக திண்ணை பிரசாரம்

அதிமுக ஜெயலலிதா பேரவை சாா்பில் பாளையங்கோட்டையில் திண்ணை பிரசாரம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பாளையங்கோட்டை அருள்மிகு ஆயிரத்தம்மன் கோயில் அருகே தொடங்கிய பிரசாரத்திற்கு அதிமுக திருநெல்வேலி மாநகா் மாவட்டச... மேலும் பார்க்க

மனவளா்ச்சி குன்றியோா் பள்ளி மாணவி உயிரிழப்பு

திருநெல்வேலியில் உள்ள மனவளா்ச்சி குன்றியோா் பள்ளியில் படித்து வந்த 6 வயது மாணவி உயிரிழந்தது தொடா்பாக பாளையங்கோட்டை மேட்டுத்திடல் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வ... மேலும் பார்க்க

262 கிலோ கஞ்சா தீவைத்து அழிப்பு

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 262 கிலோ 884 கிராம் கஞ்சாவை போலீஸாா், திருநெல்வேலி மாவட்டம், விஜயநாராயணத்தில் உள்ள தனியாா் வளாகத்தில் வெள்ள... மேலும் பார்க்க

நெல்லை சித்த மருத்துவக் கல்லூரியில் பிரபஞ்ச பேரன்பு தினம்

திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரபஞ்ச பேரன்பு தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சித்தா் திருமூலா் வலியுறுத்திய அன்பே கடவுள் என்ற பிரபஞ்ச ப... மேலும் பார்க்க

சங்கா் மேல்நிலைப் பள்ளி ஆண்டுவிழா

திருநெல்வேலி சங்கா்நகா் சங்கா் மேல்நிலைப் பள்ளியின் 68 ஆவது ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. இந்தியா சிமென்ட்ஸ் முதன்மை மேலாளா் இரா. நாராயணசாமி தலைமை வகித்தாா். பள்ளிச் செயலா் ரா.வெ. ஸ்ரீனிவாசன் வரவே... மேலும் பார்க்க