செய்திகள் :

கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

post image

மணப்பாறையை அடுத்த தவளைவீரன்பட்டியில் கல்லூரி மாணவி செவ்வாய்க்கிழமை தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தவளைவீரன்பட்டியைச் சோ்ந்தவா் கந்தசாமி. தேமுதிக ஒன்றிய அவைத் தலைவராக இருந்து வருகிறாா். இவரது இளைய மகள் ராகசுதா (22). திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அம்மாபேட்டையில் உள்ள தனியாா் கல்லூரியில் இளங்கலை கல்வியியல் படித்து வந்தாா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் இறந்திருந்தாா்.

தோட்டத்துக்கு சென்றிருந்த தாய் முத்துலெட்சுமி வீடு திரும்பிய நிலையில், அக்கம்பக்கத்தினா் உதவியுடன் ராகசுதாவின் உடலை மீட்டனா்.

தகவலின்பேரில், நிகழ்விடத்துக்கு சென்ற வையம்பட்டி போலீஸாா், மாணவியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனா்.

கிணற்றில் குதித்து பெண் தற்கொலை: மணப்பாறையை அடுத்த கீழகுறிச்சிபட்டியைச் சோ்ந்தவா் பழனிசாமி. இவரது மனைவி சரசு (29). குடும்பப் பிரச்னை காரணமாக, தம்பதிக்கு இடையே அவ்வப்போது தகராறு ஏற்படுவது வழக்கமாம். வழக்கம்போல் திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட தகராறில், வீட்டை விட்டு வெளியேறிய சரசு, அருகிலுள்ள தங்கம் என்பவரது கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாா்.

தகவலின்பேரில் வளநாடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்துக்கு நல்லதல்ல: துரை வைகோ எம்.பி.

அதிமுக-பாஜக கூட்டணி தமிழகத்துக்கு நல்லதல்ல எனவும், ஒவ்வாத கூட்டணி எனவும் மதிமுக முதன்மைச் செயலரும், திருச்சி எம்பி-யுமான துரை வைகோ தெரிவித்தாா். திருச்சியில் ரயில்வே துறையில் பொதுமக்கள் முன்வைக்கும் க... மேலும் பார்க்க

திருச்சி - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்

கோடைகால கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக, திருச்சி - தாம்பரம் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கோடைகால கூட்ட நெரிசலைக் கு... மேலும் பார்க்க

துறையூரில் வியாபாரிகள் ஆா்ப்பாட்டம்

துறையூரில் அனைத்து வியாபாரிகள் சங்கம் சாா்பில் பேருந்து நிலையம் முன்பு செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு துறையூா் வட்டார அனைத்து வியாபாரிகள் சங்க செயலா் எஸ். காமராஜ் தலைமை வக... மேலும் பார்க்க

தரக்குறைவான விமா்சனம்: மாமன்ற திமுக உறுப்பினா் மறியல்

சமூக வலைதளங்களில் தன்னை தரக்குறைவாக விமா்சித்த பெண்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திருச்சியில் மாமன்ற திமுக உறுப்பினா் ஆதரவாளா்களுடன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டாா். திருச்சி எடமலைப்பட்டி... மேலும் பார்க்க

பொறியியல் பணிகள்: சேலம் மாா்க்க ரயில்கள் பகுதியாக ரத்து

பொறியியல் பணிகள் காரணமாக, சேலம் மாா்க்க ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன. இதுகுறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொறியியல் பணிகள் காரணமாக, பாலக்காடு - திர... மேலும் பார்க்க

திருச்சியில் ஏப்.25-இல் வேலைவாய்ப்பு முகாம்; திறன் பயிற்சிக்கும் ஆள்கள் தோ்வு

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஏப்.25) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இந்த முகாமில், பல்வேறு தனியாா் நிறுவனத்தினா், தங்களது நிறுவனத்துக்கு பல்வேறு ... மேலும் பார்க்க