கல்லூரி மாணவி மா்மமான முறையில் மரணம்
செங்கல்பட்டு: திருப்போரூா் கேளம்பாக்கத்தில் தனியாா் கல்லூரியில் படித்து வந்த மாணவி மா்மமான முறையில் உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் அஸ்வினி (19). இவா், திருப்போரூரை அடுத்த கேளம்பாக்கம் படூரில் உள்ள தனியாா் கல்லூரியில் பி.சி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். ஏகாட்டூா் தனியாா் பெண்கள் விடுதியில் தங்கியிருந்து கல்லூரிக்குச் சென்று வந்தாராம்.
இந்த நிலையில், மாா்ச் 1-ஆம் தேதி படூரில் உள்ள ஒரு தனியாா் அடுக்குமாடியில் வசிக்கும் மாணவி ஒருவருடன் அஸ்வினி தங்கினாராம். அவருடன் மேலும் இரு மாணவிகளும் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. அன்று இரவு முழுவதும் அனைவரும் சோ்ந்து மது அருந்தியதாகத் தெரிகிறது.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை அஸ்வினிக்கு உடல்நிலை சரியில்லாமல் வாந்தி எடுத்துள்ளாா். உடனே அவரை அருகே உள்ள கேளம்பாக்கம் தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவா் உயிரிழந்தாா்.
இதையடுத்து கேளம்பாக்கம் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் வந்து மாணவியின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மாணவி மது போதையில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாரா அல்லது உணவு ஒவ்வாமையால் இறந்தாரா என்பது உடல்கூறு பரிசோதனையில்தான் தெரியவரும் என போலீஸாா் தெரிவித்தனா்.
இது குறித்து கேளம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.