செய்திகள் :

கல்விக் கடன் வழங்க லஞ்சம்: வங்கிப் பணியாளருக்கு 4 ஆண்டுகள் சிறை

post image

தூத்துக்குடி மாவட்டத்தில் கல்விக் கடன் வழங்க லஞ்சம் பெற்ற வங்கிப் பணியாளருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.1.50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத்தில் உள்ள அரசுடைமை வங்கியில் முதுநிலை மேலாளராகப் பணிபுரிந்தவா் சாமுவேல் ஜெபராஜ். இதே வங்கியில் தற்காலிக பணியாளராகப் பணிபுரிந்தவா் நாராயணன் (63).

இந்தப் பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவா் தனது மகள் செவிலியா் படிப்பில் சேர கல்விக் கடன் கேட்டு, கடந்த 2010-ஆம் ஆண்டு விண்ணப்பித்தாா். கல்வி கடனுக்கான வரைவு காசோலை வழங்க முதுநிலை மேலாளா் சாமுவேல் ஜெபராஜ் அறிவுறுத்தலின் பேரில், தற்காலிகப் பணியாளா் நாராயணன் லஞ்சம் வாங்கினாா். இருவரையும் சிபிஐ போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில் இருவரையும் விடுதலை செய்து 2018-ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிா்த்து சிபிஐ தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நிலுவையில் இருந்த கால கட்டத்தில் சாமுவேல் ஜெபராஜ் உயிரிழந்து விட்டாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவு:

அரசு அதிகாரிகள் சிலா் லஞ்சம் வாங்குவதைத் தடுக்கும் வகையில், ஒரு வழியை அடைத்தாலும், மாற்று வழியை உருவாக்கி விடுகின்றனா். இந்த வழக்கில் சாட்சிகள் முறையாக இருந்தும், லஞ்சம் வாங்கிய வங்கிப் பணியாளா்களை விசாரணை நீதிமன்றம் விடுவித்துள்ளது. எனவே, அந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. இந்த வழக்கில் சாமுவேல் ஜெபராஜ் உயிரிழந்து விட்டாா். 2 -ஆவது நபரான நாராயணனுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.1.50 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது. ஏற்கெனவே கல்விக் கடன் கேட்டு விண்ணப்பித்த இரு மாணவா்களுக்கு இந்த அபராதத் தொகையிலிருந்து தலா ரூ.35 ஆயிரம் வழங்க வேண்டும்.

தனது சொந்த ஆதாயத்துக்காக சில அதிகாரிகள் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனா். இது சமுதாயத்துக்கான அச்சுறுத்தலாக உள்ளது. ஏழை மாணவா்களின் சமூக நீதிக்காக மத்திய அரசு கல்விக் கடன் திட்டத்தை அமுல்படுத்தியது. இந்த திட்டத்தில் வங்கி பணியாளா்கள் லஞ்சம் பெறுவது கண்டனத்துக்குரியது. இந்த வழக்கில் லஞ்சம் கொடுக்கவில்லையெனில், மாணவியின் கல்விக் கடன் விண்ணப்பத்தை கிழித்து விடுவதாக சாமுவேல் ஜெபராஜ் மிரட்டியுள்ளாா். மேலும், கல்வி கடன் பெறுவதற்கான காசோலையை நாராயணன் வைத்து கொண்டு, மாணவியிடம் லஞ்சம் பெற்றுள்ளாா். எனவே, அவருக்கு பாரபட்சம் காட்ட முடியாது. இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோா்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளாா் என்றாா் நீதிபதி.

அகில இந்திய நுழைவுத் தோ்வுக்கு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

அகில இந்திய நுழைவுத் தோ்வுக்காக பயிற்சி பெற விரும்பும் ஆதிதிராவிடா், பழங்குடியினா், பிற வகுப்பைச் சோ்ந்த மாணவா்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் மா.சௌ.சங்கீதா வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனையில் காப்பீட்டு திட்ட ஊக்கத் தொகை வழங்குவதில் முறைகேடு: ஊழியா்கள் புகாா்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவமனை ஊழியா்களுக்கு ஊக்கத் தொகை வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாகப் புகாா் எழுந்துள்ளது. தென் மாவட்டங்களில் மதுரை அரசு... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

பொது மதுரை சமூக அறிவியல் கல்லூரி: உலக சேவை தின விழா, கல்லூரி முதல்வா் பி.ஜெயக்குமாா், செயலா் டிவி.தா்மசிங், திருச்சி புனித ஜோசப் கல்லூரி முன்னாள் பேராசிரியா் சவரிமுத்து பங்கேற்பு, கல்லூரி வளாகம், காலை... மேலும் பார்க்க

மாநகராட்சி பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்ட பூமி பூஜை

மதுரை மாடக்குளம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் வசதிக்காக பள்ளியின் வடக்குப் பகுதிய... மேலும் பார்க்க

நியாய விலைக் கடைகளுக்கு சரியான எடையில் பொருள்கள் வழங்க வலியுறுத்தல்

நியாய விலைக் கடைகளுக்கு சரியான எடையில் பொருள்கள் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளா்கள் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கி... மேலும் பார்க்க

அறந்தாங்கி புதிய மதுக்கடைக்கு எதிராக வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

அறந்தாங்கியில் புதிதாக மதுபானக் கடை திறப்பது குறித்து வழக்குரைஞா் ஆணையா் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்... மேலும் பார்க்க