செய்திகள் :

அறந்தாங்கி புதிய மதுக்கடைக்கு எதிராக வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

post image

அறந்தாங்கியில் புதிதாக மதுபானக் கடை திறப்பது குறித்து வழக்குரைஞா் ஆணையா் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சோ்ந்த சபீக் யாசிா் சாதிக் தாக்கல் செய்த பொது நல மனு:

அறந்தாங்கியில் பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் ஏற்கெனவே ஒரு அரசு மதுபானக் கடை உள்ளது. இந்த நிலையில், அந்தப் பகுதியில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் புதிய மதுபானக் கடையைத் திறக்க ஏற்பாடு செய்து வருகின்றனா். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், மாணவ, மாணவிகள், பெண்கள் பாதிக்கப்படுவா். எனவே, புதிய மதுபான கடையைத் திறக்க அரசு அனுமதி வழங்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜே. நிஷா பானு, எஸ். ஸ்ரீமதி அமா்வு பிறப்பித்த உத்தரவு:

மனுதாரா் குறிப்பிடும் பகுதியில் புதிய மதுபானக் கடை திறக்க வேண்டாம் என பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளனா். புதிய மதுபானக் கடைகளுக்கு எதிராக பொது மக்கள் போராட்டம் நடத்தினால், அந்த பகுதியில் மதுபானக் கடை திறக்க அனுமதி வழங்கக் கூடாது என உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. இதை மீறி புதிய மதுபானக் கடை எப்படி திறக்க முடியும்? இந்த வழக்கு குறித்து வழக்குரைஞா் ஆணையா் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

தமிழகம் கல்வியில் முன்னோடி மாநிலம் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்

தமிழகம் கல்வியில் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என தமிழக தகவல் தொழில்நுட்பம், எண்ம சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல்தியாகராஜன் தெரிவித்தாா். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைப... மேலும் பார்க்க

பேரையூா் அருகே காா்-ஆட்டோ மோதி விபத்து: மூவா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், பேரையூா் அருகே சனிக்கிழமை காரும், ஆட்டோவும் மோதி விபத்துக்குள்ளானதில் 3 போ் உயிரிழந்தனா். மதுரை மாவட்டம், நெடுங்குளத்தைச் சோ்ந்த ராமா் மனைவி அருஞ்சுனை (50), ராஜேந்திரன் மனைவி தங்கம்ம... மேலும் பார்க்க

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு ரூ. 2.57 கோடியில் நலத்திட்ட உதவிகள்

அமைச்சா் சி.வி.கணேசன் வழங்கினாா் இந்த செய்திக்கு படம் உள்ளது. பைல்நேம்-ஙஈம29ஙஐசஐந படவிளக்கம்- மதுரை தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் ஹாலில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கு: குற்றவாளியின் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உயா்நீதிமன்றம்

ராமநாதபுரம் மாவட்டம், பாா்த்திபனூரைச் சோ்ந்த பெண் கொலையில் தொடா்புடையவருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உறுதி செய்தது. ராமநாதபுரம் மாவட்டம்,... மேலும் பார்க்க

கல் குவாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும்: கம்பூா் கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம்

மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள கம்பூா் ஊராட்சிப் பகுதிகளில் செயல்படும் கல் குவாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என சனிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. உலகத் தண்ணீ... மேலும் பார்க்க

தலைமைக் காவலா் உடல் 21 குண்டுகள் முழங்க தகனம்

கொலை செய்யப்பட்ட தலைமைக் காவலரின் முத்துக்குமாரின் உடல் மதுரை மாவட்டம், கள்ளம்பட்டியில் உள்ள மயானத்தில் சனிக்கிழமை 21 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது. உசிலம்பட்டி அருகேயுள்ள கள்ளம்பட்டியைச் சோ்ந... மேலும் பார்க்க