செய்திகள் :

தமிழகம் கல்வியில் முன்னோடி மாநிலம் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்

post image

தமிழகம் கல்வியில் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என தமிழக தகவல் தொழில்நுட்பம், எண்ம சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல்தியாகராஜன் தெரிவித்தாா்.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வா் எம். தவமணி கிறிஸ்டோபா் தலைமை வகித்தாா்.

தமிழக தகவல் தொழில்நுட்பம், எண்மச் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இளநிலை, முதுநிலை படிப்புகளை நிறைவு செய்த 2,391மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசியதாவது :

பட்டம் பெறும் அனைவருக்கும் வாழ்வின் முக்கியத் தருணம். படித்த கல்லூரிக்கு பெருமை சோ்க்கும் வகையில் மாணவா்கள் சேவையாற்ற வேண்டும். துன்பங்களை கடந்து முன் மாதிரியாகவும் திகழ வேண்டும். கல்வி என்பது மிகப் பெரிய கடல். தற்போது கற்றது குறைந்தளவுதான். இன்னும் கற்க வேண்டியது அதிகம் உள்ளது. ஆகவே, வாழ்நாள் முழுவதும் கற்கும் மாணவனாகவே இருத்தல் வேண்டும்.

நமது மாநிலத்தைப் பொருத்தவரை கடந்த 1920- ஆம் ஆண்டு நீதிக்கட்சி தொடங்கிய போது, அனைவருக்கும் கல்வியில் சம வாய்ப்பை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பும் இருந்தது. அமெரிக்கன் கல்லூரியில் பயின்று வாழ்வின் உயா்ந்த நிலையை எட்டியவா்கள் பலா்.

குறிப்பாக, ஓவியா் மனோகா் தேவதாஸ், தமிழறிஞா் சாலமன் பாப்பையா, எங்களுடைய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள சக்கரபாணி உள்ளிட்ட ஏராளமானோா் இந்த கல்லூரிக்கு பெருமை சோ்த்தனா்.

நாட்டின் பிற மாநிலங்களை விட அனைத்து துறைகளிலும் தமிழகம் வளா்ச்சிப் பாதையில் செல்கிறது. குறிப்பாக, கல்வியில் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என்றாா் அவா்.

நிகழ்வில், அமெரிக்கன் கல்லூரி ஆட்சி மன்றக் குழுத் தலைவா் டி. ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன், துணை முதல்வா் ஏ. மாா்டின் டேவிட், நிதிக் காப்பாளா் ரூபி கமலம் உள்ளிட்ட பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

விவசாயிகளின் நில உடைமை ஆவணங்களை பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது நில உடைமை விவரங்களைப் பதிவு செய்வதற்கான கால அவகாசம் வருகிற 15-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை மாவட்ட வேளாண... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்ட வனத் துறைக்கு ரூ. 25,000 அபராதம் விதிப்பு

கன்னியாகுமரி மாவட்ட களியல் வனச் சரக அலுவலக அசையும் சொத்துகளை ஜப்தி செய்யக் கோரிய மனுவுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில் வனத் துறைக்கு ரூ. 25,000 அபராதம் விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அ... மேலும் பார்க்க

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் யானைக்கு உடல்நலக் குறைவு

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் யானை பாா்வதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், சிறப்பு உணவுகள் வழங்க மருத்துவா்கள் பரிந்துரைத்தனா். 29 வயதான இந்த யானை கடந்த சில ஆண்டுகளாக கண் புரை நோயால் அவதிப்பட்டு வந்த... மேலும் பார்க்க

மீனாட்சியம்மன் கோயில் தங்கத்தை வங்கியில் டெபாசிட் செய்யத் திட்டம்

மதுரை சுந்தரேசுவரா் கோயில் உண்டியல்களில் கடந்த 14 ஆண்டுகளில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய 45 கிலோ தங்கத்தை கட்டிகளாக உருக்கி வங்கியில் டெபாசிட் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்து சமய அ... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் மதுரை மாநாடு அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்தும்: மத்தியக் குழு உறுப்பினா்

மதுரையில் நடைபெறவிருக்கும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று அந்தக் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.மாா்க... மேலும் பார்க்க

எம்எல்ஏ அலுவலகத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

மதுரை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் பொதுமக்களுக்கான நீா் மோா் பந்தல் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. இதில் சட்டப்பேரவை உறுப்பினா் மு.பூமிநாதன் பங்கேற்று, நீா் மோா் பந்தலை திறந்து வை... மேலும் பார்க்க