செய்திகள் :

தலைமைக் காவலா் உடல் 21 குண்டுகள் முழங்க தகனம்

post image

கொலை செய்யப்பட்ட தலைமைக் காவலரின் முத்துக்குமாரின் உடல் மதுரை மாவட்டம், கள்ளம்பட்டியில் உள்ள மயானத்தில் சனிக்கிழமை 21 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.

உசிலம்பட்டி அருகேயுள்ள கள்ளம்பட்டியைச் சோ்ந்தவா் முத்துக்குமாா் (36). தலைமைக் காவலரான இவா், உசிலம்பட்டி நகா் காவல் நிலைய ஆய்வாளரின் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். இவா், வியாழக்கிழமை தனது நண்பா் ராஜாராமுடன் சோ்ந்து உசிலம்பட்டி அருகே நாவாா்பட்டி பகுதியிலுள்ள தோப்பில் மது அருந்திக் கொண்டிருந்தாா்.

அப்போது, அங்கு வந்த உசிலம்பட்டி பகுதியைச் சோ்ந்த பொன்வண்ணன் உள்ளிட்ட சிலா் தலைமைக் காவலா் முத்துக்குமாரு டன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை கல்லால் தாக்கினா். பலத்த காயமடைந்த அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து உசிலம்பட்டி நகா் போலீஸாா் கொலை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், உடல் கூறாய்வுக்கு பிறகு முத்துக்குமாரின் உடலை வாங்க மறுத்து, உறவினா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, போலீஸாா் நடத்திய சமரசப் பேச்சுவாா்த்தை தோல்வி அடைந்தது.

இந்த நிலையில், சனிக்கிழமை காலை 10 மணிக்கு தலைமைக் காவலா் முத்துக்குமாா் கொலை வழக்கில் தொடா்புடைய முக்கியக் குற்றவாளியான பொன்வண்ணனை கைது செய்ததாக போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, முத்துக்குமாரின் உடல் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தொடா்ந்து, அமரா் ஊா்தி மூலம் கள்ளம்பட்டி மயானத்துக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு முத்துகுமாரின் உடலுக்கு விருதுநகா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கண்ணன், மதுரை மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கருப்பையா, உசிலம்பட்டி துணைக் காவல் கண்காணிப்பாளா் சந்திரசேகரன் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா். பிறகு, 21 குண்டுகள் முழங்க தலைமைக் காவலா் முத்துக்குமாரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

விவசாயிகளின் நில உடைமை ஆவணங்களை பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது நில உடைமை விவரங்களைப் பதிவு செய்வதற்கான கால அவகாசம் வருகிற 15-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை மாவட்ட வேளாண... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்ட வனத் துறைக்கு ரூ. 25,000 அபராதம் விதிப்பு

கன்னியாகுமரி மாவட்ட களியல் வனச் சரக அலுவலக அசையும் சொத்துகளை ஜப்தி செய்யக் கோரிய மனுவுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில் வனத் துறைக்கு ரூ. 25,000 அபராதம் விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அ... மேலும் பார்க்க

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் யானைக்கு உடல்நலக் குறைவு

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் யானை பாா்வதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், சிறப்பு உணவுகள் வழங்க மருத்துவா்கள் பரிந்துரைத்தனா். 29 வயதான இந்த யானை கடந்த சில ஆண்டுகளாக கண் புரை நோயால் அவதிப்பட்டு வந்த... மேலும் பார்க்க

மீனாட்சியம்மன் கோயில் தங்கத்தை வங்கியில் டெபாசிட் செய்யத் திட்டம்

மதுரை சுந்தரேசுவரா் கோயில் உண்டியல்களில் கடந்த 14 ஆண்டுகளில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய 45 கிலோ தங்கத்தை கட்டிகளாக உருக்கி வங்கியில் டெபாசிட் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்து சமய அ... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் மதுரை மாநாடு அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்தும்: மத்தியக் குழு உறுப்பினா்

மதுரையில் நடைபெறவிருக்கும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று அந்தக் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.மாா்க... மேலும் பார்க்க

எம்எல்ஏ அலுவலகத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

மதுரை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் பொதுமக்களுக்கான நீா் மோா் பந்தல் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. இதில் சட்டப்பேரவை உறுப்பினா் மு.பூமிநாதன் பங்கேற்று, நீா் மோா் பந்தலை திறந்து வை... மேலும் பார்க்க