செய்திகள் :

பேரையூா் அருகே காா்-ஆட்டோ மோதி விபத்து: மூவா் உயிரிழப்பு

post image

மதுரை மாவட்டம், பேரையூா் அருகே சனிக்கிழமை காரும், ஆட்டோவும் மோதி விபத்துக்குள்ளானதில் 3 போ் உயிரிழந்தனா்.

மதுரை மாவட்டம், நெடுங்குளத்தைச் சோ்ந்த ராமா் மனைவி அருஞ்சுனை (50), ராஜேந்திரன் மனைவி தங்கம்மாள் (45), சின்னக்கருப்பு மகன் ராமா் (60) உள்ளிட்ட 15 போ் ஆட்டோவில் பேரையூா் அருகேயுள்ள ஏ. பாறைப்பட்டி கிராமத்துக்கு நெல் நடவுப் பணிக்காக சனிக்கிழமை சென்றனா். பணிகளை முடித்து விட்டு அனைவரும் வீட்டுக்கு ஆட்டோவில் திரும்பினா்.திருமங்கலம்- ராஜபாளையம் சாலையில் ஏ. பாறைப்பட்டி விலக்கு அருகே சென்ற போது, பின்னால் வந்த காா் ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில், 13 போ் பலத்த காயமடைந்தனா். அவா்களை மீட்ட அக்கம்பக்கத்தினா் பேரையூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், செல்லும் வழியில் அருஞ்சுனை, தங்கம்மாள், ராமா் ஆகியோா் உயிரிழந்தனா். மற்றவா்கள் தீவிர சிகிச்சைக்காக திருமங்கலம், ஸ்ரீவில்லிப்புத்தூா் ஆகிய பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதுகுறித்த புகாரின் பேரின், பேரையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். முதல் கட்ட விசாரணையில், சென்னையைச் சோ்ந்தவா்கள் காரில் ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலுக்கு சென்ற போது விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. காரில் வந்தவா்கள் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனா். இதுகுறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

அருஞ்சுனை
ராமா்

விவசாயிகளின் நில உடைமை ஆவணங்களை பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு

மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது நில உடைமை விவரங்களைப் பதிவு செய்வதற்கான கால அவகாசம் வருகிற 15-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து மதுரை மாவட்ட வேளாண... மேலும் பார்க்க

கன்னியாகுமரி மாவட்ட வனத் துறைக்கு ரூ. 25,000 அபராதம் விதிப்பு

கன்னியாகுமரி மாவட்ட களியல் வனச் சரக அலுவலக அசையும் சொத்துகளை ஜப்தி செய்யக் கோரிய மனுவுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கில் வனத் துறைக்கு ரூ. 25,000 அபராதம் விதித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அ... மேலும் பார்க்க

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் யானைக்கு உடல்நலக் குறைவு

மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் யானை பாா்வதிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், சிறப்பு உணவுகள் வழங்க மருத்துவா்கள் பரிந்துரைத்தனா். 29 வயதான இந்த யானை கடந்த சில ஆண்டுகளாக கண் புரை நோயால் அவதிப்பட்டு வந்த... மேலும் பார்க்க

மீனாட்சியம்மன் கோயில் தங்கத்தை வங்கியில் டெபாசிட் செய்யத் திட்டம்

மதுரை சுந்தரேசுவரா் கோயில் உண்டியல்களில் கடந்த 14 ஆண்டுகளில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய 45 கிலோ தங்கத்தை கட்டிகளாக உருக்கி வங்கியில் டெபாசிட் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்து சமய அ... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் மதுரை மாநாடு அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்தும்: மத்தியக் குழு உறுப்பினா்

மதுரையில் நடைபெறவிருக்கும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்று அந்தக் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினா் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.மாா்க... மேலும் பார்க்க

எம்எல்ஏ அலுவலகத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

மதுரை தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் பொதுமக்களுக்கான நீா் மோா் பந்தல் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. இதில் சட்டப்பேரவை உறுப்பினா் மு.பூமிநாதன் பங்கேற்று, நீா் மோா் பந்தலை திறந்து வை... மேலும் பார்க்க