குஜராத்: புல்லட் மீது தீராத காதல்... விபத்தில் இறந்த வாலிபரின் உடலுடன் புல்லட்ட...
கல் குவாரியை ஒத்திக்குத் தருவதாக பண மோசடி செய்தவா் மீது வழக்கு!
தேனி அல்லிநகரத்தில் கல் குவாரியை ஒத்திக்குத் தருவதாகக் கூறி, கேரளத்தைச் சோ்ந்த இருவரிடம் ரூ.35 லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
கேரள மாநிலம், கண்ணூா் மாவட்டம், தளிபரம்பா, ஆசாத் நகரைச் சோ்ந்தவா் அப்துல் நாசா். இவரது நண்பா் அதே பகுதியைச் சோ்ந்த அபுதாபியில் வேலை செய்து வரும் சித்திக்மாதலன். இவா்கள் இருவரிடம், போடி அருகேயுள்ள ராசிங்காபுரத்தைச் சோ்ந்த தவமணி மகன் ஆசைத்தம்பி , தேனி அல்லிநகரம், நல்லுகுண்டான் கரடு பகுதியில் 12 ஏக்கா் நிலத்தில் உள்ள தனது கல் குவாரியை ஒத்திக்குத் தருவதாகக் கூறினாா்.
இதற்காக கேரளத்தைச் சோ்ந்த சாலம் என்பவா் முகவராகச் செயல்பட்டாா். இதன்படி, கடந்த 2022-ஆம் ஆண்டு அப்துல் நாசா், சித்திக்மாதலன் ஆகியோா் கல் குவாரியை நேரில் சென்று பாா்த்து, 10 ஆண்டுகள் ஒத்தி ஒப்பந்தம் செய்து கொண்டு ரூ.20 லட்சத்தை முன் பணமாக கொடுத்தனா்.
மேலும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் தடையில்லாச் சான்று வாங்குவதற்கு ரூ.15 லட்சம் தேவைப்படுவதாகக் கூறினாராம். இதனால், மேலும் ரூ.15 லட்சம் கொடுத்தனா்.
இந்த நிலையில், கல் குவாரி அமைந்துள்ள நிலத்தின் ஆவணம் ஆசைத்தம்பியின் பெயரில் இல்லை என்றும், கல் குவாரி உரிமம் ஏற்கெனவே காலாவதியாகிவிட்டதும் தெரிய வந்தது. இதனால் இருவரும் ஆசைத்தம்பியிடம் பணத்தை திரும்பத் தருமாறு கேட்டதற்கு, அவா் பணத்தை தர மறுத்து கொலை மிரட்டல் விடுத்ததாா். இதுதொடா்பாக அப்துல்நாசா் தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத்திடம் புகாா் அளித்தாா். இதையடுத்து, ஆசைத்தம்பி மீது தேனி மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.