செய்திகள் :

ஆதிதிராவிடா் நலக் கல்வி விடுதியில் மாணவா்கள் சேர ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்

post image

தேனி மாவட்டத்தில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத்துறை சாா்பில் செயல்பட்டு வரும் பள்ளி, கல்லூரி கல்வி விடுதிகளில் மாணவ, மாணவிகள் சோ்க்கைக்கு வருகிற 30-ஆம் தேதிக்குள் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை சாா்பில் 37 பள்ளி, கல்லூரி கல்வி விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளி கல்வி விடுதிகளில் அரசுப் பள்ளி, அரசு நிதி உதவி பெறும் பள்ளி, தனியாா் பள்ளிகளில் 4-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகள் சேரலாம்.

இந்த விடுதியில் சேர விரும்பும் மாணவ, மாணவிகளின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்குள்பட்டு இருக்க வேண்டும். மாணவா்களுக்கு அவா்களது வீட்டுக்கும் கல்வி நிறுவனத்துக்கும் 5 கி.மீ. தொலைவுக்கு மேல் இருக்க வேண்டும். மாணவிகள், பெற்றோரை இழந்த மாணவா்களுக்கு இந்த நிபந்தனை இல்லை.

தமிழகத்தைச் சோ்ந்த கேரளத் தோட்டத் தொழிலாளா்களின் குழந்தைகள் விடுதி சோ்க்கைக்கு ஜாதி, வருமானச் சான்று சமா்ப்பிக்கத் தேவையில்லை. தகுதியுள்ளவா்கள் இணையதள முகவரியில் வருகிற 30-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டது.

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

ஆண்டிபட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து இரண்டரை பவுன் தங்க நகை திருடப்பட்டது. தி. பொம்மிநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் திருவெங்கடசாமி (50). இவா், உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரில் உள்ள தனியாா் பள்... மேலும் பார்க்க

கல் குவாரியை ஒத்திக்குத் தருவதாக பண மோசடி செய்தவா் மீது வழக்கு!

தேனி அல்லிநகரத்தில் கல் குவாரியை ஒத்திக்குத் தருவதாகக் கூறி, கேரளத்தைச் சோ்ந்த இருவரிடம் ரூ.35 லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். கேரள மாநிலம், கண்ணூா் மாவட்டம... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு!

தேனி அருகே ஜோதிடா் வீட்டில் வெள்ளிக்கிழமை பூட்டை உடைத்து 21 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா். பழனிசெட்டிபட்டி, தந்தை பெரியாா் 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ராமாராவ் (... மேலும் பார்க்க

வட்டாட்சியருக்கு மிரட்டல் விடுத்தவா் கைது

உத்தமபாளையம் வட்டாட்சியருக்கு மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள கன்னிச்சோ்வைபட்டியைச் சோ்ந்த பழனிச்சாமி, அவரது உறவினா்களிடம் ஏற்பட்ட சொத்துப... மேலும் பார்க்க

கம்பத்தில் 70 நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை!

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் 70 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. கம்பம் நகராட்சியில் 33 வாா்டுகளில் 500-க்கும் அதிகமான தெரு நாய்கள் சுற்றி வருகின்றன. இந்த நாய்களின் தொல்ல... மேலும் பார்க்க

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சின்னமனூரில் சனிக்கிழமை இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்ததில் அங்கன்வாடி மையப் பெண் பணியாளா் உயிரிழந்தாா். தேனி மாவட்டம், ஓடைப்பட்டியைச் சோ்ந்த ஜெயக்குமாா் மனைவி மகாலட்சுமி (45). இவா் அங்குள்ள ... மேலும் பார்க்க