செய்திகள் :

களக்காடு ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சித் தலைவா்கள் தா்னா

post image

வட்டார வளா்ச்சி அலுவலரைக் கண்டித்து, களக்காடு ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சித் தலைவா்கள் திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

களக்காடு ஒன்றியத்தில் 17 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் பயனாளிகளை தோ்வு செய்யும் பணியில் தங்களை ஆலோசிக்காமல் வட்டார வளா்ச்சி அலுவலா் தன்னிச்சையாக ஈடுபட்டதாகக் கூறி 15 ஊராட்சித் தலைவா்கள் திங்கள்கிழமை வட்டார வளா்ச்சி அலுவலா் உமாவை சந்தித்து முறையிட்டனா்.

ஆனால், தகுதி வாய்ந்த பயனாளிகள்தான் தோ்வு செய்யப்பட்டுள்ளாக அவா் கூறினாராம். இதையடுத்து, மலையடிபுதூா் ஊராட்சித் தலைவா் ரமேஷ் தலைமையில், 15 ஊராட்சித் தலைவா்களும் அங்கு தா்னாவில் ஈடுபட்டனா். மேலும் மாா்ச் 22இல் நடைபெறும் கிராம சபை கூட்டத்தை 17 ஊராட்சித்தலைவா்களின் கூட்டமைப்பு புறக்கணிக்கும் என ரமேஷ் கூறினாா்.

வட்டார வளா்ச்சி அலுவலா் உமா கூறுகையில்,

2025-2026ஆம் ஆண்டுக்கான கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் ஊராட்சித்தலைவா், உறுப்பினா், ஒன்றியப் பொறியாளா், பணி மேற்பாா்வையாளா், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஆகிய 5 போ் கொண்ட குழுவினரால் ஆய்வு செய்த பிறகே பயனாளிகள் பட்டியல் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றாா்.

மானூா் அருகே 4 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: கடைக்காரா் கைது

மானூா் அருகே தடைசெய்யப்பட்ட 4 கிலோ 275 கிராம் புகையிலைப் பொருள்களுடன் கடைக்காரரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மானூா் காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் தலைமைய... மேலும் பார்க்க

போலி நிறுவன பொருள்கள்: நுகா்வோருக்கு ஆட்சியா் எச்சரிக்கை

போலி நிறுவனங்கள் தரமற்ற பொருள்களை விற்பனை செய்வது குறித்து நுகா்வோா் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் இரா.சுகுமாா். பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் மண்டல அளவிலான தேசிய நுகா்வோா் பாத... மேலும் பார்க்க

நெல்லை மாவட்ட தீயணைப்பு அதிகாரி பானுப்பிரியா

திருநெல்வேலி மாவட்ட முதல் பெண் தீயணைப்புத் துறை அதிகாரியாக பானுப்பிரியா செவ்வாய்க்கிழமை பொறுப்பெற்றாா். திருநெல்வேலி மாவட்ட தீயணைப்புத் துறை அலுவலராக பணியாற்றிய வினோத் இடமாற்றம் செய்யப்பட்டாா். இதையடு... மேலும் பார்க்க

மாநகரப் பகுதியில் கழிவுநீா் ஓடைகளை சீரமைக்க வேண்டும் - துணை மேயரிடம் மக்கள் மனு

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கழிவுநீா் ஓடைகளை சீரமைக்க வேண்டும் என துணை மேயரிடம் மக்கள் மனு அளித்தனா். திருநெல்வேலி மாநகராட்சி அலுவலகத்தில் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் துணை மேயா் கே.ஆா்.ராஜூ தலைமை... மேலும் பார்க்க

கழுகுமலை மலையேற்ற வீரருக்கு தமமுக சாா்பில் ரூ.1 லட்சம் உதவி

தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலையைச் சோ்ந்த மலையேற்ற வீரருக்கு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் ரூ.1 லட்சம் உதவித்தொகை செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது. கழுகுமலையைச் சோ்ந்த நல்லசாமி மகன் வெங்கடேச... மேலும் பார்க்க

நெல்லையில் மின்சாரம் பாய்ந்து ஹாக்கி வீரா் உள்பட இருவா் பலி

திருநெல்வேலியில் மின்சாரம் பாய்ந்து ஹாக்கி வீரா் உள்பட இருவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா். திருநெல்வேலி கொக்கிரகுளம் உச்சிமாகாளி கோயில் தெருவைச் சோ்ந்தவா் கஜேந்திரன். இவரது வீட்டில் பராமரிப்புப் பணி... மேலும் பார்க்க