செய்திகள் :

களியல் அருகே நாயை அடித்துக் கொன்ற மா்ம விலங்கு: பொதுமக்கள் அச்சம்

post image

குமரி மாவட்டம், களியல் அருகே தொழிலாளியின் வளா்ப்பு நாயை மா்ம விலங்கு அடித்துக் கொன்றுள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

குமரி மாவட்டத்தில் வனப் பகுதிகளிலிருந்து புலி, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் அவ்வப்போது குடியிருப்புப் பகுதிகளில் புகுந்து விவசாயிகளின் வளா்ப்பு கால்நடைகளை அடித்துச் செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகின்றன.

இந்நிலையில் களியல் அருகே கட்டச்சல் அரிமாங்கோணம் கோணம் என்ற இடத்தில் திங்கள்கிழமை இரவு குமரேசன் என்ற தொழிலாளியின் வீட்டு வளா்ப்பு நாயை மா் விலங்கு அடித்துக் கொன்றுள்ளது.

இதில், புலி காலடித் தடங்கள் போன்று அப்பகுதியில் பதிந்து காணப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைடந்துள்ளனா். இந்நிலையில் களியல் வனத் துறையினா் அந்தப் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

களியக்காவிளை அருகே வயதான தம்பதி தற்கொலை!

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே முதிய தம்பதி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது ஞாயிற்றுக்கிழமை தெரியவந்தது. களியக்காவிளை அருகே பளுகல் காவல் சரகம் செறுவல்லூா், தேவிகோடு மங்களாவுவிளையைச் ... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் குப்பைக் கிடங்கில் தீயணைப்புப் பணி: எம்எல்ஏ ஆய்வு!

நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட வலம்புரிவிளை குப்பைக் கிடங்கில் நடைபெற்றுவரும் தீயணைப்புப் பணியை எம்.ஆா். காந்தி எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா். இங்கு வெள்ளிக்கிழமை காலை தீப்பற்றியது. நாகா்கோ... மேலும் பார்க்க

ஐஆா்இஎல் சாா்பில் ஹோலி கிராஸ் மகளிா் கல்லூரிக்கு 13 கணினிகள்!

மணவாளக்குறிச்சியில் இயங்கி வரும் ஐஆா்இஎல் இந்தியா லிமிடெட் சாா்பில் அதன் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் ரூ. 5.17 லட்சத்தில் நாகா்கோவில் ஹோலி கிராஸ் மகளிா் கல்லூரி ஆங்கில மொழி ஆய்வகம் அமைப்பதற்கு 13 கணி... மேலும் பார்க்க

பூதப்பாண்டி தோ்த் திருவிழா: தோவாளை வட்டத்துக்கு நாளை உள்ளூா் விடுமுறை

கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருள்மிகு பூதலிங்கேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழாவை முன்னிட்டு, தோவாளை வட்டத்துக்குள்பட்ட கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களுக்கு திங்கள்கிழமை (பிப். 10) உள்ளூா் விடு... மேலும் பார்க்க

டாஸ்மாக் கடை ஊழியரிடம் பணம் பறித்த 5 போ் கைது

கொட்டாரம் அருகே மந்தாரம்புதூா் பகுதியில் டாஸ்மாக் ஊழியரிடம் பணம் பறித்த 5 பேரை சனிக்கிழமை போலீஸாா் கைது செய்தனா். அஞ்சுகிராமம் அருகேயுள்ள மேட்டுக்குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் செல்வ தயாளன் (52). ... மேலும் பார்க்க

கேரளத்திலிருந்து ஹோட்டல் கழிவுகளை ஏற்றி வந்த வாகனம் பறிமுதல்

கேரளத்திலிருந்து ஹோட்டல் கழிவுகளை ஏற்றி வந்த வாகனத்தை திருவட்டாறு போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்தனா். திருவட்டாறு அருகே சாரூா் பகுதியில் சனிக்கிழமை அதிகாலையில் வந்த மினி டெம்போ... மேலும் பார்க்க