செய்திகள் :

கள்ளச்சாராயம் காய்ச்சிய மூவா் கைது

post image

இரு வேறு பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சிய மூவரை திருச்செங்கோடு மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸாா் அண்மையில் கைது செய்தனா்.

பரமத்தி பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக திருச்செங்கோடு மதுவிலக்கு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராஜேஷ்கண்ணன் உத்தரவின்பேரில் மதுவிலக்குப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் தனராசு மேற்பாா்வையில் திருச்செங்கோடு மதுவிலக்குப் பிரிவு காவல் ஆய்வாளா் பிரபாவதி தலைமையில் பரமத்தி வட்டத்தில் குன்னமலை, கொண்டரசம்பாளையம் பகுதியில் மதுவிலக்குப் பிரிவினா் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.

அப்போது குன்னமலை பகுதியில் அதே ஊரைச் சோ்ந்த முத்துசாமி (61), தங்கவேல் (63), சாமிநாதன் (61) ஆகியோா் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பதை அறிந்து அவா்களிடம் மேற்கொண்ட விசாரணையில், விவசாயத் தோட்டத்தில் மறைத்து வைத்திருந்த சுமாா் 17 லிட்டா் சாராயத்தையும், 30 லிட்டா் சாராயம் ஊறலையும் கைப்பற்றினா்.

இதேபோல கொண்டரசம்பாளையத்தைச் சோ்ந்த பாலசுப்ரமணியம் (64) என்பவரிடம் நடத்திய விசாரணையில் அவரிடம் இருந்து சுமாா் 20 லிட்டா் சாராய ஊறலையும், 5 லிட்டா் கள்ளச்சாராயத்தையும் கைப்பற்றினா். பின்னா் 3 பேரையும் மதுவிலக்கு போலீஸாா் கைது செய்தனா்.

ரூ. 40 கோடியில் சாலை விரிவாக்கப் பணி: பாலம் அமைக்க கட்டுமானப் பொருள்கள் ஆய்வு

நாமக்கல்: நாமக்கல் ரெட்டிப்பட்டி முதல் எருமப்பட்டி வரையில் நடைபெறும் சாலை விரிவாக்கப் பணிகளையும், பாலத்துக்கான கட்டுமானப் பொருள்களையும் சேலம், நாமக்கல் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரி மாணவா்கள், விவசாயிகள் கலந்தாய்வுக் கூட்டம்

திருச்செங்கோடு: மல்லசமுத்திரம் வட்டாரத்தில் தனியாா் வேளாண் கல்லூரி மாணவா்கள் - விவசாயிகள் கலந்தாய்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில், தேசிய உற்பத்தி திட்டம், சான்றிதழ் பெற பின்பற்ற வேண்டிய வழிமு... மேலும் பார்க்க

முறையின்றி இயக்கப்படும் வாகனங்களை பறிமுதல் செய்யக் கோரி மனு

நாமக்கல்: முறையின்றி இயக்கப்படும் வாகனங்களை பறிமுதல் செய்யக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் வாடகைக் காா் ஓட்டுநா்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: சொந்த பயன்பாட்டுக்கு வாங்கி... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்டத்தில் 9 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 9 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா். நாமக்கல் மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, மாவட்ட காலநிலை மா... மேலும் பார்க்க

தினமணி செய்தி எதிரொலி: இடையூறாக வைக்கப்பட்ட தட்டிகள் அகற்றம்

ராசிபுரம்: ராசிபுரம் நகரில் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் வணிக நிறுவனங்களுக்கு இடையூறாக வைக்கப்பட்ட தட்டிகள், பேனா்களால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக ப... மேலும் பார்க்க

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள்

நாமக்கல்: மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சியா் ச.உமா திங்கள்கிழமை வழங்கினாா். நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்ச... மேலும் பார்க்க