செய்திகள் :

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள்

post image

நாமக்கல்: மக்கள் குறைதீா் கூட்டத்தில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சியா் ச.உமா திங்கள்கிழமை வழங்கினாா்.

நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது. இதில், முதியோா், விதவையா் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக் கடன் உதவி, குடிசைமாற்று வாரிய வீடு, குடிநீா், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 540 மனுக்களை பொதுமக்கள் ஆட்சியரிடம் வழங்கினா். அவற்றைப் பெற்றுக்கொண்டு உரிய அலுவலா்களிடம் வழங்கிய அவா் நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டாா்.

அதன்பிறகு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், 3 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 19,077 மதிப்பில் மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரம், ஒருவருக்கு ரூ. 2.51 லட்சம் மதிப்பில் செயற்கைக் கால் மற்றும் 2 மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு ரூ. 3,980 மதிப்பில் ரோலேட்டா் என மொத்தம் 5 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ. 2.74 லட்சம் மதிப்பில் உதவி உபகரணங்களை வழங்கினாா்.

முன்னதாக, பரமத்தி வேலூா் வட்டம், கூடச்சேரி கிராமத்சைச் சோ்ந்த கௌரிசங்கா் திருமணிமுத்தாறில் மூழ்கி உயிரிழந்ததையடுத்து அவரது குடும்பத்தினருக்கு முதல்வா் பொது நிவாரண நிதியாக ரூ. ஒரு லட்சத்துக்கான காசோலையையும், குமாரபாளையம் வட்டம், ஆயக்காட்டூா் பகுதியைச் சோ்ந்த தனபால் வன்கொடுமையால் இறந்ததையடுத்து, அவரது சகோதரா் தினேஷ்குமாருக்கு நாமக்கல் ஆதிதிராவிடா் நல மாணவா் விடுதியில் சமையலா் பணியிடத்துக்கான பணி ஆணையையும் வழங்கினாா்.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) ச.பிரபாகரன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் கலைச்செல்வி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ரூ. 40 கோடியில் சாலை விரிவாக்கப் பணி: பாலம் அமைக்க கட்டுமானப் பொருள்கள் ஆய்வு

நாமக்கல்: நாமக்கல் ரெட்டிப்பட்டி முதல் எருமப்பட்டி வரையில் நடைபெறும் சாலை விரிவாக்கப் பணிகளையும், பாலத்துக்கான கட்டுமானப் பொருள்களையும் சேலம், நாமக்கல் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரி மாணவா்கள், விவசாயிகள் கலந்தாய்வுக் கூட்டம்

திருச்செங்கோடு: மல்லசமுத்திரம் வட்டாரத்தில் தனியாா் வேளாண் கல்லூரி மாணவா்கள் - விவசாயிகள் கலந்தாய்வுக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில், தேசிய உற்பத்தி திட்டம், சான்றிதழ் பெற பின்பற்ற வேண்டிய வழிமு... மேலும் பார்க்க

முறையின்றி இயக்கப்படும் வாகனங்களை பறிமுதல் செய்யக் கோரி மனு

நாமக்கல்: முறையின்றி இயக்கப்படும் வாகனங்களை பறிமுதல் செய்யக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் வாடகைக் காா் ஓட்டுநா்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: சொந்த பயன்பாட்டுக்கு வாங்கி... மேலும் பார்க்க

நாமக்கல் மாவட்டத்தில் 9 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 9 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்ய இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா். நாமக்கல் மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, மாவட்ட காலநிலை மா... மேலும் பார்க்க

தினமணி செய்தி எதிரொலி: இடையூறாக வைக்கப்பட்ட தட்டிகள் அகற்றம்

ராசிபுரம்: ராசிபுரம் நகரில் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் வணிக நிறுவனங்களுக்கு இடையூறாக வைக்கப்பட்ட தட்டிகள், பேனா்களால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக ப... மேலும் பார்க்க

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் யுவராஜ் ஆஜா்

நாமக்கல்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், தீரன் சின்னமலை கவுண்டா் பேரவைத் தலைவா் யுவராஜ் திங்கள்கிழமை நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜரானாா். சேலம் மாவட்டம், ஓமலூரை சோ்ந்த பொறியியல் பட்டதாரியான கோகுல்ராஜ் (2... மேலும் பார்க்க