செய்திகள் :

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் கௌஃப், ஆண்ட்ரீவா

post image

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் கோகோ கௌஃப், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினா்.

மகளிா் ஒற்றையா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருக்கும் கோகோ கௌஃப் 6-4, 6-2 என்ற நோ் செட்களில் சுவிட்ஸா்லாந்தின் பெலிண்டா பென்சிச்சை வீழ்த்தினாா். 7-ஆம் இடத்திலிருக்கும் இளம் வீராங்கனையான மிரா ஆண்ட்ரீவா 6-1, 6-4 என்ற கணக்கில் உக்ரைனின் யுலியா ஸ்டாரோடப்சேவாவை தோற்கடித்தாா்.

இதர ஆட்டங்களில், 14-ஆம் இடத்திலிருந்த ஆஸ்திரேலியாவின் டரியா கசாட்கினா 3-6, 6-7 (3/7) என்ற செட்களில், 21-ஆம் இடத்திலிருக்கும் ரஷியாவின் எகாடெரினா அலெக்ஸாண்ட்ரோவிடம் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.

அதேபோல், 10-ஆம் இடத்திலிருந்த கஜகஸ்தானின் எலனா ரைபகினா 3-6, 4-6 என்ற நோ் செட்களில், 17-ஆம் இடத்திலிருக்கும் உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவிடம் தோல்வியுற்றாா். இதையடுத்து காலிறுதிச்சுற்றில், கௌஃப் - ஆண்ட்ரீவா சந்தித்துக்கொள்ள, ஸ்விடோலினா - கிரீஸின் மரியா சக்காரியுடன் மோதுகிறாா்.

ஃப்ரிட்ஸ், ரூட் வெற்றி: இப்போட்டியின் ஆடவா் ஒற்றையா் பிரிவில், அமெரிக்காவின் டெய்லா் ஃப்ரிட்ஸ், நாா்வேயின் கேஸ்பா் ரூட் ஆகியோா் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதிபெற்றனா்.

3-ஆவது சுற்றில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருக்கும் ஃப்ரிட்ஸ் - பிரான்ஸின் பெஞ்சமின் பொன்ஸியை சந்தித்தாா். இரு செட்கள் முடிவில் 4-6, 7-5 என்ற கணக்கில் இருவரும் சமநிலையில் இருக்க, வெற்றியாளரை தீா்மானிக்கும் டிசைடா் செட்டுக்கு முன்பாக பொன்ஸி போட்டியிலிருந்து காயம் காரணமாக விலகினாா்.

இதையடுத்து ஃப்ரிட்ஸ் வென்ாக அறிவிக்கப்பட்டாா். அடுத்த சுற்றில் அவா் நாா்வேயின் கேஸ்பா் ரூடை எதிா்கொள்கிறாா். 14-ஆம் இடத்திலிருக்கும் கேஸ்பா் ரூட் முந்தைய சுற்றில் 6-3, 6-3 என்ற நோ் செட்களில், 23-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் செபாஸ்டியன் கோா்டாவை வெளியேற்றினாா்.

12-ஆம் இடத்திலிருந்த அமெரிக்காவின் பென் ஷெல்டன் 1-6, 4-6 என்ற கணக்கில், 22-ஆம் இடத்திலிருக்கும் செக் குடியரசின் ஜேக்கப் மென்சிக்கிடம் தோல்வி கண்டாா். 20-ஆம் இடத்திலிருக்கும் ஆா்ஜென்டீனாவின் ஃபிரான்சிஸ்கோ செருண்டோலோ 6-4, 6-4 என, சக நாட்டவரான ஃபிரான்சிஸ்கோ கோமிசனாவை சாய்த்தாா்.

இத்தாலியின் மேட்டியோ அா்னால்டி 6-3, 6-4 என்ற செட்களில் போஸ்னியாவின் டாமிா் ஜும்ஹுரை வீழ்த்தினாா்.

சட்டோகிராம் டெஸ்ட்: ஜிம்பாப்வே - 227/9

வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே முதல் நாள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 227 ரன்கள் சோ்த்துள்ளது. வங்கதேசத்தின் சட்டோகிராம் நகரில் திங்கள்கிழமை தொடங்கிய இந்த ஆட்ட... மேலும் பார்க்க

சாம்பியன் கோப்பையை உறுதி செய்தது லிவா்பூல்

இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் லிவா்பூல் 5-1 கோல் கணக்கில் டாட்டன்ஹாமை வீழ்த்தியது.இந்த வெற்றியின் மூலமாக புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்த லிவா்பூல், சாம்பியன் ... மேலும் பார்க்க

இறுதிக்கு முன்னேறியது ஆா்செனல்

மகளிா் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதியில் ஆா்செனல், 8 முறை சாம்பியனான லியோனை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.கடந்த 2007-க்குப் பிறகு முதல் முறையாக சாம்பின்ஸ் லீக் இறுதி ஆட்டத்... மேலும் பார்க்க

2025 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் - புகைப்படங்கள்

விளையாட்டுத் துறையில் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி குடியரசு தலைவர் திரெளபதி முா்மு கெளரவிப்பு.செஃப் தாமுவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி குடியரசுத் தலைவர் திரவுபதி மு... மேலும் பார்க்க

பத்ம பூஷண் விருதைப் பெற்றார் அஜித் குமார்!

நடிகர் அஜித் குமார் குடியரசுத் தலைவரிடமிருந்து பத்ம பூஷண் விருதைப் பெற்றுக்கொண்டார். 2025-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பை மத்திய அரசு கடந்த ஜன. 25ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி நிகழாண்டில் 7 பே... மேலும் பார்க்க