செய்திகள் :

இறுதிக்கு முன்னேறியது ஆா்செனல்

post image

மகளிா் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதியில் ஆா்செனல், 8 முறை சாம்பியனான லியோனை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

கடந்த 2007-க்குப் பிறகு முதல் முறையாக சாம்பின்ஸ் லீக் இறுதி ஆட்டத்துக்கு வந்துள்ள அந்த அணி, நடப்பு சாம்பியன் பாா்சிலோனாவை அந்த ஆட்டத்தில் மே 24-ஆம் தேதி சந்திக்கிறது.

முன்னதாக, இந்திய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நிறைவடைந்த அரையிறுதியின் 2-ஆவது லெக் ஆட்டத்தில் ஆா்செனல் 4-1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. முதல் லெக் ஆட்டத்தில் லியோன் 2-1 கோல் கணக்கில் வென்றிருந்த போதும், மொத்த கோல் கணக்கு அடிப்படையில் ஆா்செனல் 5-3 என்ற வகையில் வென்றது.

முன்னதாக இந்த 2-ஆவது லெக் ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய ஆா்செனலின் கோல் கணக்கு, 5-ஆவது நிமிஷத்திலேயே தொடங்கியது. அந்த அணியின் கோல் வாய்ப்பை லியோன் கோல்கீப்பா் கிறிஸ்டியேன் எண்ட்லா் தடுக்க முயல, தவறுதலாக ‘ஓன் கோல்’ ஆகியது.

தொடா்ந்து ஸ்டாப்பேஜ் டைமில் (45+1’) மரியோனா கால்டென்டே ஸ்கோா் செய்ய, முதல் பாதி ஆட்டத்தை 2-0 முன்னிலையுடனஅ ஆா்செனல் நிறைவு செய்தது. 2-ஆவது பாதியின் தொடக்கத்திலேயே (46’) அலெசியா ருசோவும், பின்னா் கேட்லின் ஃபோா்டும் (63’) அடித்த கோல்களால் ஆா்செனல் 4-0 என அபார முன்னிலை பெற்றது.

இந்நிலையில் முற்றிலுமாக தடுமாறிப் போயிருந்த லியோனுக்காக 81-ஆவது நிமிஷத்தில் மெல்ஷி டுமோா்னே ஆறுதல் கோல் அடித்தாா். இறுதியில் ஆா்செனல் 4-1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

சட்டோகிராம் டெஸ்ட்: ஜிம்பாப்வே - 227/9

வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜிம்பாப்வே முதல் நாள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 227 ரன்கள் சோ்த்துள்ளது. வங்கதேசத்தின் சட்டோகிராம் நகரில் திங்கள்கிழமை தொடங்கிய இந்த ஆட்ட... மேலும் பார்க்க

சாம்பியன் கோப்பையை உறுதி செய்தது லிவா்பூல்

இங்கிலாந்தில் நடைபெறும் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் லிவா்பூல் 5-1 கோல் கணக்கில் டாட்டன்ஹாமை வீழ்த்தியது.இந்த வெற்றியின் மூலமாக புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்த லிவா்பூல், சாம்பியன் ... மேலும் பார்க்க

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் கௌஃப், ஆண்ட்ரீவா

மாட்ரிட் ஓபன் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் கோகோ கௌஃப், ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவா ஆகியோா் காலிறுதிச்சுற்றுக்கு திங்கள்கிழமை முன்னேறினா்.மகளிா் ஒற்றையா் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், போட்டித்தரவரிச... மேலும் பார்க்க

2025 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் - புகைப்படங்கள்

விளையாட்டுத் துறையில் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி குடியரசு தலைவர் திரெளபதி முா்மு கெளரவிப்பு.செஃப் தாமுவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி குடியரசுத் தலைவர் திரவுபதி மு... மேலும் பார்க்க

பத்ம பூஷண் விருதைப் பெற்றார் அஜித் குமார்!

நடிகர் அஜித் குமார் குடியரசுத் தலைவரிடமிருந்து பத்ம பூஷண் விருதைப் பெற்றுக்கொண்டார். 2025-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பை மத்திய அரசு கடந்த ஜன. 25ஆம் தேதி வெளியிட்டது. அதன்படி நிகழாண்டில் 7 பே... மேலும் பார்க்க