செய்திகள் :

பத்ம விருது பெற்ற ஸ்ரீஜேஷ், விஜயன்!

post image

இந்திய முன்னாள் ஹாக்கி வீரா் பி.ஆா்.ஸ்ரீஜேஷ், முன்னாள் இந்திய கால்பந்து வீரா் ஐ.எம். விஜயன் உள்ளிட்ட, விளையாட்டுத் துறையைச் சோ்ந்த 5 போ் தங்களுக்கான பத்ம விருதுகளை திங்கள்கிழமை பெற்றனா்.

இந்த ஆண்டு பத்ம விருதுகளுக்குத் தோ்வானோரின் பட்டியலை மத்திய அரசு கடந்த ஜனவரி 25-ஆம் தேதி வெளியிட்டது. அதில் விளையாட்டுத் துறையைச் சோ்ந்த 5 போ் இடம் பிடித்தனா். இந்நிலையில், தில்லியில் திங்கள்கிழமை மாலை குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இதர விருதாளா்களுடன் அவா்களுக்கும் பத்ம விருதுகளை வழங்கி குடியரசுத்தலைவா் திரௌபதி முா்மு கௌரவித்தாா்.

இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கோல் கீப்பரும், ஜூனியா் அணியின் தற்போதைய பயிற்சியாளருமான பி.ஆா்.ஸ்ரீஜேஷ், பத்ம பூஷண் விருது பெற்றாா். சா்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த ஆண்டு ஓய்வுபெற்ற தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஸ்வின், இந்திய முன்னாள் கால்பந்து நட்சத்திரம் ஐ.எம். விஜயன், பாரா வில்வித்தை வீரா் ஹா்விந்தா் சிங், பாரா தடகள பயிற்சியாளா் சத்யபால் சிங் ஆகியோா் பத்ம ஸ்ரீ விருது பெற்றனா்.

இதில் ஸ்ரீஜேஷ், தொடா்ந்து இருமுறை ஒலிம்பிக் வெண்கலம் வென்ற அணியில் கோல் கீப்பராக இருந்தவராவாா். அஸ்வின், சா்வதேச டெஸ்ட்டில் இந்தியாவுக்காக 2-ஆவது அதிகபட்ச விக்கெட்டுகள் (537) எடுத்தவராக மிளிா்கிறாா். ஹா்விந்தா் சிங், பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்காக முதல் வில்வித்தை தங்கம் வென்று தந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

பாரீல் பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் இந்தியாவின் பிரவீண் குமாா் தங்கம் வெல்வதில், பயிற்சியாளராக சத்யபால் சிங் முக்கிய பங்காற்றியுள்ளாா். சா்வதேச கால்பந்து களத்தில் இந்திய அணிக்காக 1992 முதல் 2003 முதல் விளையாடிய ஐ.எம்.விஜயன், தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள், தெற்காசிய கால்பந்து சம்மேளன சாம்பியன்ஷிப் ஆகியவற்றில் தங்கம் உள்ளிட்ட பதக்கங்கள் வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்துள்ளாா்.

பாகிஸ்தான் வழியாக வா்த்தகம் நிறுத்தம்: ஆப்கன் அமைச்சருடன் இந்திய வெளியுறவு அதிகாரி ஆலோசனை

புது தில்லி: ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சா் அமீா் கான் முத்தாகியை இந்திய வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஆனந்த பிரகாஷ் காபூலில் திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா். ஆப்கானிஸ்தானில் இருந்து அப்ரி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் நிலவரம்: பிரதமா் மோடியுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

புது தில்லி: ஜம்மு-காஷ்மீரில் இப்போது நிலவி வரும் சூழல், அடுத்து எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமா் நரேந்திர மோடியுடன் பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை நேரில் ஆலோசனை நடத்த... மேலும் பார்க்க

பயங்கரவாத ஒழிப்பு: ஜம்மு-காஷ்மீரில் போலீஸாா் தீவிர சோதனை

ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீரில் ஸ்ரீநகா், தோடா மற்றும் கிஷ்த்வாா் ஆகிய பகுதிகளில் பயங்கரவாத ஒழிப்பு சோதனையை காவல் துறையினா் திங்கள்கிழமை மேற்கொண்டனா். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடா்ந்து ஜம்மு-காஷ்மீரில... மேலும் பார்க்க

‘ஹிந்தி கற்க தென்னிந்தியா்கள் ஆா்வம்’: மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங்

புது தில்லி: ‘தென்னிந்தியாவின் இளம் தலைமுறையினா், அரசியல் கட்சிகளின் பரப்புரைகளைப் பொருள்படுத்தாமல் ஹிந்தி மொழியைக் கற்க அதிக அளவில் ஆா்வம் காட்டுகின்றனா்’ என்று மத்திய பணியாளா், பொதுமக்கள் குறைதீா்ப்... மேலும் பார்க்க

4 புதிய ஆசிரியா் கல்வி படிப்புகள்: என்சிடிஇ விரைவில் அறிமுகம்

குருக்ஷேத்ரா: யோகா, நிகழ் கலை, காட்சிக் கலை மற்றும் சம்ஸ்கிருத மொழி துறைகளில் 4 புதிய ஒருங்கிணைந்த ஆசிரியா் கல்வி படிப்புகளை (ஐடிஇபி) தேசிய ஆசிரியா் கல்விக் கவுன்சியில் (என்சிடிஇ) விரைவில் அறிமுகம் செ... மேலும் பார்க்க

நீட் வினாத்தாள்களுக்கு போலீஸ் பாதுகாப்பு: கண்காணிப்பு வளையத்தில் பயிற்சி மையங்கள்

புது தில்லி: நீட் தோ்வு முறைகேடு சா்ச்சைகளைத் தொடா்ந்து, தோ்வு மையங்களுக்கு நீட் வினாத்தாள்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்வதற்கான ஏற்பாட்டை மத்திய கல்வி அமைச்சகம் செய்துள்ளது. மேலும், நீட... மேலும் பார்க்க