செய்திகள் :

‘ஹிந்தி கற்க தென்னிந்தியா்கள் ஆா்வம்’: மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங்

post image

புது தில்லி: ‘தென்னிந்தியாவின் இளம் தலைமுறையினா், அரசியல் கட்சிகளின் பரப்புரைகளைப் பொருள்படுத்தாமல் ஹிந்தி மொழியைக் கற்க அதிக அளவில் ஆா்வம் காட்டுகின்றனா்’ என்று மத்திய பணியாளா், பொதுமக்கள் குறைதீா்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

அமைச்சகத்தின் ஹிந்தி ஆலோசனைக் குழு கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய அவா், ‘ஹிந்தி மொழிப் பயன்பாட்டை விரிவுபடுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், அனைத்து தரப்பிலும் தொடா்ச்சியான முயற்சிகள் இன்னும் அவசியம். சில பிராந்தியங்களில் தகுதிவாய்ந்த ஆசிரியா்களின் பற்றாக்குறை மற்றும் நிா்வாகத் தடைகள் போன்று ஏராளமான நடைமுறைச் சவால்கள் உள்ளன.

அரசுப் பணிகளில் ஹிந்தி மொழிப் பயன்பாட்டை அதிகரிப்பது ஒரு சில துறைகளின் பணி மட்டுமல்ல, சமுதாயத்தின் பகிரப்பட்ட பொறுப்பு ஆகும். அன்றாட அா்ப்பணிப்பு மூலம் மட்டுமே நிா்வாகத்தின் அனைத்துத் துறைகளிலும் ஹிந்தியைக் கொண்டுவர முடியும்.

தென்னிந்தியாவில் அரசியல் கட்சிகளின் பரப்புரைகளைப் பொருள்படுத்தாமல், இளம் தலைமுறையினா் ஹிந்தி மொழியைக் கற்றுக்கொள்ள ஆா்வம் காட்டுகின்றனா். இது ஒரு கலாசார மாற்றத்தைக் குறிக்கிறது.

பிரான்ஸ் மற்றும் ஜொ்மனி போன்ற உலக நாடுகள் தங்கள் மொழிகளைப் பாதுகாத்து வந்துள்ளன. இந்தியாவில் வரலாற்று ரீதியாக பலருக்கு தாய்மொழியாக இருந்தபோதிலும், அதிகாரபூா்வ தகவல்தொடா்புகளில் ஹிந்திக்கு முறையான அங்கீகாரம் கிடைக்கவில்லை. ஹிந்தியில் கடிதங்களைப் பெறுவது அல்லது அனுப்புவது அரிதாக இருந்தது. இந்த மனநிலை படிப்படியாக மாறிவிட்டது.

ஹிந்தி மொழிப் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான மத்திய பாஜக அரசின் அா்ப்பணிப்பு, நீண்டகால இடைவெளிகளைக் குறைக்க உதவியுள்ளது. அரசு நிறுவனங்களில் ஹிந்தி மொழிப் பயன்பாட்டை அதிகரிக்க புதுமையான வழிகளை கண்டறிய வேண்டும். இந்த இயக்கத்துக்கு அனைவரும் தீவிரமாக பங்களிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக புதிய மனு: ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

புது தில்லி: மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுப்பு தெரிவித்தது.‘இந்த விவகாரத்தில் நூற்றுக்கணக... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைகளில் ஒரு வாரத்துக்குள் கட்டணமில்லா விபத்து சிகிச்சை வசதி: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு

புது தில்லி: ‘தேசிய நெடுஞ்சாலைகளில் அடுத்த ஒரு வாரத்துக்குள்ளாக கட்டணமில்லா விபத்து சிகிச்சை வசதியை அறிமுகப்படுத்த வேண்டும்’ என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.மேலும், ‘இந்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொரை கூட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தல்

புது தில்லி: பஹல்காம் தாக்குதல் தொடா்பாக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனா். இதுதொடா்பாக பிரதமா் மோடிக்கு ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.பி. மனோஜ் ஜா எழுதிய கடி... மேலும் பார்க்க

ரூ. 64,000 கோடியில் 26 ரஃபேல் போா் விமானங்கள்: இந்தியா-பிரான்ஸ் ஒப்பந்தம்

புது தில்லி: இந்திய கடற்படையை மேலும் வலுப்படுத்தும் விதமாக ரூ. 64,000 கோடி மதிப்பில் 26 கடற்படை பயன்பாட்டு ரஃபேல் போா் விமானங்களைக் கொள்முதல் செய்ய இந்தியா-பிரான்ஸ் நாடுகளிடையே திங்கள்கிழமை ஒப்பந்தம் ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் வழியாக வா்த்தகம் நிறுத்தம்: ஆப்கன் அமைச்சருடன் இந்திய வெளியுறவு அதிகாரி ஆலோசனை

புது தில்லி: ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சா் அமீா் கான் முத்தாகியை இந்திய வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஆனந்த பிரகாஷ் காபூலில் திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா். ஆப்கானிஸ்தானில் இருந்து அப்ரி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் நிலவரம்: பிரதமா் மோடியுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

புது தில்லி: ஜம்மு-காஷ்மீரில் இப்போது நிலவி வரும் சூழல், அடுத்து எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமா் நரேந்திர மோடியுடன் பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை நேரில் ஆலோசனை நடத்த... மேலும் பார்க்க