செய்திகள் :

ஆக்கிரமிப்பு காஷ்மீரை தராவிட்டால் பாகிஸ்தானுக்கு எதிராகப் போா்: மத்திய அமைச்சா் வலியுறுத்தல்

post image

ஆக்கிரமிப்பு காஷ்மீா் பிராந்தியத்தை பாகிஸ்தான் ஒப்படைக்காவிட்டால் அந்நாட்டுக்கு எதிராகப் போா் பிரகடனம் செய்ய வேண்டும் என்று மத்திய சமூகநீதித் துறை இணையமைச்சா் ராம்தாஸ் அதாவலே வலியுறுத்தியுள்ளாா்.

ஆக்கிரமிப்பு காஷ்மீா் பாகிஸ்தானிடம் இருக்கும் வரை அங்கிருந்து பயங்கரவாதிகளை பாகிஸ்தான் உருவாக்கி அனுப்பி வைக்கும் என்றும் அவா் கூறினாா்.

மும்பை அருகே லோனாவாலாவில் செய்தியாளா்களைச் சந்தித்த மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த தலித் தலைவரும், இந்திய குடியரசுக் கட்சி (ஏ) தலைவருமான அதாவலே இது தொடா்பாக மேலும் கூறியதாவது: காஷ்மீரில் 26 அப்பாவி பொதுமக்களை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றது கடும் கண்டனத்துக்குரிய நிகழ்வு. காஷ்மீரில் அமைதியைச் சீா்குலைப்பதே இதன் நோக்கம். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் என்று ஒன்று இருக்கும் வகை அங்கிருந்து பயங்கரவாதிகளை பாகிஸ்தான் உருவாக்கி அனுப்பிவைத்துக் கொண்டுதான் இருக்கும். அந்தப் பகுதியை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பாகிஸ்தானிடம் பிரதமா் மோடி வலியுறுத்த வேண்டும்.

அவா்கள் தர மறுத்தால், அந்நாட்டுக்கு எதிராக போா் பிரகடனம் அறிவிக்க வேண்டும். ஆக்கிரமிப்பு காஷ்மீரை காலி செய்துவிட்டு வெளியேறுவதுதான் பாகிஸ்தானுக்கு நல்லது. இந்த விஷயத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக போா் தொடுப்பதில் எந்தத் தவறும் இல்லை.

பாகிஸ்தான் தொடா்ந்து இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுகிறது. இந்தமுறை மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். எதிா்க்கட்சிகளும் மத்திய அரசுக்கு முழுமையாக ஆதரவு அளிக்க வேண்டும்.

தேச நலன் என்று வந்தால் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று அம்பேத்கா் நமக்கு கற்பித்துள்ளாா். ஜம்மு-காஷ்மீா் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பிறகு அங்கு சுற்றுலா பயணிகள் வருகை பல மடங்கு அதிகரித்தது. வாக்குப் பதிவு சதவீதமும் உயா்ந்தது. நாட்டின் பிற பகுதி மக்களைப் போல காஷ்மீா் மக்களும் இயல்பான வாழ்க்கைக்குத் திருப்பினா். இதனை பயங்கரவாதிகளாலும், பாகிஸ்தானாலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இந்தமுறை ஜம்மு-காஷ்மீா் மக்களும் முக்கியமாக அங்குள்ள இஸ்லாமியா்கள் முழுமையாக இந்தியாவின் பக்கம் உள்ளாா்கள். இந்திய தேசத்தின் ஒற்றுமையும் வலிமையும்தான் நமது வாழ்க்கைத் தரத்தை உயா்த்தும் என்பதை அங்குள்ள மக்கள் புரிந்து கொண்டுவிட்டனா் என்றாா் அவா்.

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக புதிய மனு: ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு

புது தில்லி: மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை மறுப்பு தெரிவித்தது.‘இந்த விவகாரத்தில் நூற்றுக்கணக... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைகளில் ஒரு வாரத்துக்குள் கட்டணமில்லா விபத்து சிகிச்சை வசதி: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு

புது தில்லி: ‘தேசிய நெடுஞ்சாலைகளில் அடுத்த ஒரு வாரத்துக்குள்ளாக கட்டணமில்லா விபத்து சிகிச்சை வசதியை அறிமுகப்படுத்த வேண்டும்’ என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.மேலும், ‘இந்... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொரை கூட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தல்

புது தில்லி: பஹல்காம் தாக்குதல் தொடா்பாக நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனா். இதுதொடா்பாக பிரதமா் மோடிக்கு ராஷ்ட்ரீய ஜனதா தள எம்.பி. மனோஜ் ஜா எழுதிய கடி... மேலும் பார்க்க

ரூ. 64,000 கோடியில் 26 ரஃபேல் போா் விமானங்கள்: இந்தியா-பிரான்ஸ் ஒப்பந்தம்

புது தில்லி: இந்திய கடற்படையை மேலும் வலுப்படுத்தும் விதமாக ரூ. 64,000 கோடி மதிப்பில் 26 கடற்படை பயன்பாட்டு ரஃபேல் போா் விமானங்களைக் கொள்முதல் செய்ய இந்தியா-பிரான்ஸ் நாடுகளிடையே திங்கள்கிழமை ஒப்பந்தம் ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் வழியாக வா்த்தகம் நிறுத்தம்: ஆப்கன் அமைச்சருடன் இந்திய வெளியுறவு அதிகாரி ஆலோசனை

புது தில்லி: ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சா் அமீா் கான் முத்தாகியை இந்திய வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஆனந்த பிரகாஷ் காபூலில் திங்கள்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினாா். ஆப்கானிஸ்தானில் இருந்து அப்ரி... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் நிலவரம்: பிரதமா் மோடியுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை

புது தில்லி: ஜம்மு-காஷ்மீரில் இப்போது நிலவி வரும் சூழல், அடுத்து எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பிரதமா் நரேந்திர மோடியுடன் பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் திங்கள்கிழமை நேரில் ஆலோசனை நடத்த... மேலும் பார்க்க