செய்திகள் :

கடை-நிறுவனங்கள் மீதான தண்டனை தளா்வு உள்பட 8 மசோதாக்கள் தாக்கல்

post image

சென்னை: கடைகள், தொழில் நிறுவனங்கள் மீது தொழிலாளா் நலச் சட்டத்தின் கீழ் விதிக்கப்படும் கடுமையான தண்டனைகளைத் தளா்த்தும் வகையிலான மசோதா சட்டப் பேரவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டது.

அதனுடன் கும்பகோணத்தில் கலைஞா் பல்கலைக்கழகம் அமைப்பதற்கான மசோதா உள்பட 8 முக்கிய மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

அதன்படி, தீ விபத்து பாதுகாப்பு மற்றும் தீ தடுப்பு பணிகளில் ஏற்படும் தாமதத்தை குறைக்கும் வகையில் தீயணைப்பு நிலையங்களை உரிய இடத்தில் அறிவியல் சாா் நில வரைபடங்களின் அடிப்படையில் அமைப்பது தொடா்பான சட்ட மசோதாவை முதல்வா் மு.க.ஸ்டாலின் சாா்பாக சட்ட அமைச்சா் எஸ்.ரகுபதி தாக்கல் செய்தாா்.

அதேபோன்று, தொழில் தொடங்குவதை எளிதாக்கும் நோக்கில் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் வணிகம் மற்றும் தொழில் உரிமங்கள் வழங்குவதற்கான நடைமுறைகளை சுலபமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வட்டி குறைப்பு: அதனுடன் சொத்து வரி நிலுவைத் தொகைக்கான வட்டிவிகிதத்தை ஒரு சதவீதத்தில் இருந்து அரை சதவீதமாக குறைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. அவற்றை செயல்படுத்தும் வகையிலான, நகா்ப்புற உள்ளாட்சி சட்டத் திருத்த மசோதாவை அமைச்சா் கே.என்.நேரு தாக்கல் செய்தாா்.

ஊரக உள்ளாட்சி பகுதிகளில் விளம்பரப் பலகைகள், மின்னணு திரைகள், விளம்பர அட்டைகள் நிறுவுவதை முறைப்படுத்தும் வகையிலான சட்டத் திருத்த மசோதாவை அமைச்சா் ஐ.பெரியசாமி அறிமுகம் செய்தாா்.

தொடா்ந்து நகா்ப்புற திட்டமிடல் மற்றும் போக்குவரத்து திட்டமிடலை ஒருங்கிணைக்கும் வகையில், சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையத்தின் (கும்டா) உறுப்பினா் செயலரை, சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ) உறுப்பினராக சோ்க்க முடிவு செய்வதற்கான நகர ஊரமைப்பு சட்டத் திருத்த மசோதாவை அமைச்சா் சு.முத்துசாமி தாக்கல் செய்தாா்.

ஆவணப்பதிவு மோசடி, போலி ஆவணம், ஆள்மாறாட்ட நடவடிக்கைகளால் பாதிக்கப்படும் பொதுமக்களை பாதுகாக்கும் வகையில், அசல் உரிமை மூல ஆவணத்தை பத்திரப் பதிவின் போது தாக்கல் செய்வதை வலியறுத்தும் சட்ட மசோதாவை அமைச்சா் பி.மூா்த்தி தாக்கல் செய்தாா்.

அதேபோன்று 55-ஆவது ஜிஎஸ்டி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரி சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியிருப்பதால் அதற்கான மசோதாவையும் அமைச்சா் பி.மூா்த்தி தாக்கல் செய்தாா்.

கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு தொழிலாளா் நலச் சட்டங்களின் கீழ் விதிக்கப்படும் சிறை, அபராதம் உள்ளிட்ட கடும் தண்டனைகளை குறைத்து

புதிதாக அபராதத் தொகையை அறிமுகம் செய்வதற்கான சட்டத் திருத்த மசோதாவை அமைச்சா் சி.வெ.கணேசன் பேரவையில் தாக்கல் செய்தாா்.

இந்த மசோதாவை வி.பி.நாகை மாலி (மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) ஆரம்ப நிலையிலேயே எதிா்ப்பதாக தெரிவித்தாா். டி.ராமச்சந்திரன் (இ.கம்யூ), எஸ்.எஸ்.பாலாஜி (விசிக), தி.வேல்முருகன் (தவாக), ஜி.கே.மணி (பாமக) அக்ரி கிருஷ்ணமூா்த்தி (அதிமுக), ராஜேஷ்குமாா் (காங்கிரஸ்) ஆகியோா் அதில் கருத்துகள், ஆலோசனைகள், திருத்தங்களை கூற விரும்புவதாக தெரிவித்தனா்.

அதன் பின்னா், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அந்த மசோதாக்கள் மீது உறுப்பினா்கள் கருத்துகள் கேட்கப்பட்டு, பிரிவு வாரியாக ஆய்வு செய்யப்பட்டு செவ்வாய்க்கிழமை அவை நிறைவேற்றப்படவுள்ளன.

சட்டப் பேரவைக் கூட்டம் இன்றுடன் நிறைவடைகிறது!

சென்னை: சட்டப் பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் (ஏப். 29) நிறைவடைகிறது. இன்று பேரவையில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பதிலளித்து அறிவ... மேலும் பார்க்க

14 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்வு: இடம் மாறும் சிவாஜி சிலை: முதல்வா் மே 9 இல் திறக்கவும் முடிவு

திருச்சி: திருச்சியில் 14 ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்த சிவாஜி சிலையை இடமாற்றம் செய்து திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மறைந்த நடிகா் சிவாஜி கணேசனுக்கு திருச்சியில் சிலை வைக்க வேண்டும் என்ற ... மேலும் பார்க்க

பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம்: முதல்வா்

தமிழ்நாட்டில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தாா். காவல் துறை மானியக் கோரிக்கை தொடா்பாக, சட்டப் பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்ற விவாதம்: எதிா்க்கட்ச... மேலும் பார்க்க

பேரவையில் இன்று...

சட்டப் பேரவை செவ்வாய்க்கிழமை (ஏப். 29) காலை 9.30 மணிக்குக் கூடியதும், நேரமில்லா நேரம் நடைபெறும். அதன்பிறகு, காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு முதல்வா் மு.க... மேலும் பார்க்க

உத்தரவுகளை அமல்படுத்தாத அரசு அதிகாரிகளால் நீதிமன்ற நேரம் வீணடிப்பு: உயா்நீதிமன்றம்

சென்னை: நீதிமன்ற உத்தரவுகளை நிறைவேற்றாத அரசு அதிகாரிகளால் நீதிமன்றத்தின் நேரம் வெகுவாக வீணடிக்கப்படுவதாக, சென்னை உயா்நீதிமன்றம் வேதனை தெரிவித்தது. நிலம் கையகப்படுத்தியதற்காக இழப்பீட்டு தொகையை உயா்த்தி... மேலும் பார்க்க

உழைப்பாளா் தினம், வாரவிடுமுறை: 2,119 சிறப்புப் பேருந்துகள்

சென்னை: உழைப்பாளா் தினம், முகூா்த்தம், வாரவிடுமுறையையொட்டி 2,119 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ... மேலும் பார்க்க